MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • கரூர் கூட்டநெரிசல் வழக்கு.. சிபிஐ விசாரணைக்கு முட்டுகட்டை போடும் திமுக.. உச்சநீதிமன்றத்தில் பரபரப்பு மனு

கரூர் கூட்டநெரிசல் வழக்கு.. சிபிஐ விசாரணைக்கு முட்டுகட்டை போடும் திமுக.. உச்சநீதிமன்றத்தில் பரபரப்பு மனு

கரூர் கூட்டநெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும். விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் அமைத்த விசாரணைக் குழுவிடமே ஒப்படைக்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீடு.

1 Min read
Author : Velmurugan s
Published : Dec 02 2025, 11:28 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
கரூர் கூட்ட நெரிசல்
Image Credit : Asianet News

கரூர் கூட்ட நெரிசல்

கரூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட மொத்தம் 41 பேரி பரிதாபமாக உயிரிழந்தனர். நாடு முழுவதும் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில். இது தொடர்பாக விசாரணை நடத்த தமிழக அரசு சார்பில் அருணா ஜெகதீசனின் ஒருநபர் ஆணையத்தை அமைத்து உத்தரவிட்டது. மேலும் சென்னை உயர்நீதிமன்றம் சார்பில் ஐபிஎஸ் அதிகாரி தலைமையில் சிறப்பு விசாரணை குழுவை அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

23
சிபிஐ விசாரணை
Image Credit : Asianet News

சிபிஐ விசாரணை

ஆனால் இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழக வெற்றி கழகம் மற்றும் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் உறவினர் தரப்பில் வழக்கை சிபிஐ வசம் மாற்ற வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. அதன் அடிப்படையில் கரூர் வழக்கு விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைப்பதாக நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இந்த விசாரணையை ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி கண்காணிப்பார் என்றும் உத்தரவிடப்பட்டது. நீதிமன்றத்தின் அடிப்படையில் சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Articles

Related image1
உதயநிதி தொகுதிலயே விஜய் தான் லீடிங்.. சர்வே முடிவுகளால் கதி கலங்கும் அறிவாலயம்
Related image2
த.வெ.க. கட்சி அல்ல.. கிளை தான்! செங்கோட்டையனை போட்டுத் தாக்கிய உதயநிதி ஸ்டாலின்!
33
தடை கோரும் தமிழக அரசு
Image Credit : Asianet News

தடை கோரும் தமிழக அரசு

இந்நிலையில் தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், “கூட்டநெரிசல் விவகாரத்தில் தமிழக அரசு அமைத்த ஒருநபர் ஆணையத்தின் விசாரணை சரியான முறையில் சென்றுகொண்டிருந்தது. அதே போன்று உயர்நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணை குழுவும் சரியான முறையில் விசாரணை மேற்கொண்டது. ஆகையால் சிபிஐ விசாரணையை ரத்து செய்துவிட்டு மீண்டும் ஒருநபர் ஆணையம் மற்றும் சிறப்பு விசாரணைக் குழுவுக்கே மாற்றம் செய்ய வேண்டும் என தமிழக அரசு சார்பில் கோரப்பட்டுள்ளது.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
டிவி.கே. விஜய்
விஜய் (நடிகர்)
சிபிஐ (மத்திய புலனாய்வுப் பிரிவு)
உச்ச நீதிமன்றம்
திமுக
தமிழ்நாடு அரசு

Latest Videos
Recommended Stories
Recommended image1
இன்று எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகள் செயல்படும்? பள்ளி மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!
Recommended image2
விஜய் கொடுத்த அசைன்மெண்ட்..! செங்கோட்டையனின் வருகைக்கு பின் அடியோடு மாறிய தவெக..!
Recommended image3
திமுக கூட்டணிக்குள் விஜய் வைத்த வேட்டு..! இருதலைக் கொல்லியான காங்கிரஸ்..! மு.க.ஸ்டாலின் பகீர் முடிவு..!
Related Stories
Recommended image1
உதயநிதி தொகுதிலயே விஜய் தான் லீடிங்.. சர்வே முடிவுகளால் கதி கலங்கும் அறிவாலயம்
Recommended image2
த.வெ.க. கட்சி அல்ல.. கிளை தான்! செங்கோட்டையனை போட்டுத் தாக்கிய உதயநிதி ஸ்டாலின்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved