MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • அதிகாலையிலேயே அலறிய தூத்துக்குடி! குற்றவாளியை சுட்டுப் பிடித்த போலீசார்! நடந்தது என்ன? பரபரப்பு தகவல்!

அதிகாலையிலேயே அலறிய தூத்துக்குடி! குற்றவாளியை சுட்டுப் பிடித்த போலீசார்! நடந்தது என்ன? பரபரப்பு தகவல்!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே மூதாட்டி மற்றும் அவரது மகள் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் கைது. தப்பிக்க முயன்ற ஒரு குற்றவாளியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். 

1 Min read
Author : vinoth kumar
| Updated : Mar 06 2025, 11:47 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மேலநம்பிபுரம் கிராமத்தில் மூதாட்டி சீதாலட்சுமி (75) மற்றும் அவரது மகள் ராமஜெயந்தி (45) ஆகியோர் இருவரும் கடந்த 03ம் தேதி ஆகியோர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தனர். அவர்கள் அணிந்திருந்த சுமார் 13 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த இரட்டை கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

24
Thoothukudi Double Murder

Thoothukudi Double Murder

இந்த சம்பவம் தொடர்பாக எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதுமட்டுமல்லாமல் தனிப்படை அமைக்கப்பட்டு பல்வேறு நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் கடந்த மூன்று நாட்களாக போலீசார் எட்டயபுரம் மற்றும் விளாத்திகுளம் பகுதிகளில் உள்ள காட்டுப் பகுதியில்  கேமரா மற்றும் வாகன சோதனை மூலமாக தீவிர தேர்தல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். 

இதையும் படிங்க: தாய், குழந்தைகள் மரண வழக்கில் திடீர் திருப்பம்! குடும்பத்தையே கொலை செய்துவிட்டு கணவர் செய்த பகீர் சம்பவம்!

34
Police shoot

Police shoot

இந்நிலையில் இன்று அதிகாலை தூத்துக்குடி -மதுரை தேசிய நெடுஞ்சாலை எட்டையாபுரம் காட்டுப்பகுதியில் குற்றவாளிகள் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவலின் அடிப்படையில், உதவியாளர் முத்துராஜ் மற்றும் தலைமை காவல் ஆய்வாளர் ஜாய்சன் உள்ளிட்ட போலீசார் குற்றவாளியை பிடிக்க சென்றனர். அப்போது குற்றவாளியான முனீஸ்வரன் மற்றும் முத்து கண்ணன், வேல்முருகன் ஆகியோர்  போலீசாரை கண்டதும் தாக்கிவிட்டு தப்பிக்க முயன்றனர். 

44
Police Arrest

Police Arrest

இதனால் போலீசார் முனீஸ்வரன் என்பவரை வலது காலில் சுட்டுபிடித்தனர். பின்னர் முத்து கணேஷ் வேல்முருகன் ஆகியோரை கைது செய்தனர்.  குண்டு பாய்ந்ததில் வலியால் துடித்த முனீஸ்வரன் மற்றும் காயமடைந்த காவலர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
காவல்துறை துப்பாக்கிச் சூடு

Latest Videos
Recommended Stories
Recommended image1
Tamil News Live today 06 December 2025: Govt Job - ரயில்வேயில் 400 புதிய வேலைகள்! எழுத்துத் தேர்வு எப்போ தெரியுமா?
Recommended image2
இந்த ஐந்து நாள் பயிற்சி போய்ட்டு வந்தாலே போதும்! கை நிறைய சம்பாதிக்கலாம்! உங்க லைஃப் டோட்டலா மாறிடும்!
Recommended image3
இன்று எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகள் செயல்படும்? பள்ளி மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved