MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • சென்னைதான் எப்பவும் டாப்! போகிக்கும் பொங்கலுக்கும் சேர்த்து ரூ. 518 கோடி மது விற்பனை!

சென்னைதான் எப்பவும் டாப்! போகிக்கும் பொங்கலுக்கும் சேர்த்து ரூ. 518 கோடி மது விற்பனை!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் டாஸ்மாக் கடைகளில் ரூ. 518 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளன. போகி அன்று ரூ. 217 கோடியும், தைப்பொங்கல் அன்று ரூ. 301 கோடியும் வசூலாகியுள்ளது.

1 Min read
Author : SG Balan
Published : Jan 16 2026, 09:12 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
டாஸ்மாக் விற்பனை
Image Credit : our own

டாஸ்மாக் விற்பனை

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களில் மட்டும் ரூ. 518 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

24
நாள் வாரியாக விற்பனை விவரம்
Image Credit : our own

நாள் வாரியாக விற்பனை விவரம்

பொங்கல் விடுமுறையை முன்னிட்டு குடிமகன்கள் அதிகளவில் மதுபானங்களை வாங்கியதால் விற்பனை வழக்கத்தை விட அதிகரித்துள்ளது.

• போகி பண்டிகை (ஜனவரி 14): தமிழகம் முழுவதும் ரூ. 217 கோடிக்கு மது விற்பனையானது.

• தைப்பொங்கல் (ஜனவரி 15): பண்டிகை தினத்தன்று விற்பனை இன்னும் அதிகரித்து, ஒரே நாளில் ரூ. 301 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.

இதன் மூலம் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் மொத்த விற்பனை ரூ. 518 கோடியைத் தொட்டுள்ளது. இன்று (ஜனவரி 16) திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், நேற்று முன்தினமே மதுபானங்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Related image1
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை.. அதிர்ச்சியில் குடிமகன்கள்
Related image2
இரண்டு நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்.! ஆட்சியர்கள் அதிரடி.! பேரதிர்ச்சியில் குடிமகன்கள்.!
34
மண்டல வாரியான நிலவரம்
Image Credit : our own

மண்டல வாரியான நிலவரம்

வழக்கம்போல சென்னை மண்டலம் விற்பனையில் முதலிடத்தில் உள்ளது.

• சென்னை மண்டலம்: கடந்த 2 நாட்களில் மட்டும் அதிகபட்சமாக ரூ. 98.75 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.

• மற்ற மண்டலங்களான மதுரை, திருச்சி, சேலம் மற்றும் கோயம்புத்தூரிலும் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.

44
கடந்த ஆண்டுடன் ஒப்பீடு
Image Credit : our own

கடந்த ஆண்டுடன் ஒப்பீடு

கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது தொடர் விடுமுறையாக இருந்ததால் 4 நாட்களில் ரூ. 725 கோடிக்கு மது விற்பனையானது. ஆனால், இந்த ஆண்டு வெறும் 2 நாட்களில் ரூ. 518 கோடியை எட்டியிருப்பது குறிப்பிடத்தக்க வளர்ச்சியாகப் பார்க்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் தற்போது 4,829 டாஸ்மாக் கடைகளும், அவற்றுடன் இணைந்த 3,240 பார்களும் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
டாஸ்மாக்
டாஸ்மாக் கடை
பொங்கல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
வங்கக்கடலில் புயல்? தமிழகத்தில் ஓயாமல் ஊத்தப்போகும் மழை.. வானிலை கொடுத்த சூப்பர் அப்டேட்!
Recommended image2
அடேங்கப்பா.! சென்னை மத்திய கைலாஷ் L வடிவ மேம்பாலம்! இவ்வளவு சிறப்பு அம்சங்கள் இருக்கா.!
Recommended image3
நயினார் எந்த பெண்ணின் மனம் புண்படும் வகையில் பேசினாரோ.. அந்த பெண்ணிடம்.. எம்.பி.சுதா சரவெடி!
Related Stories
Recommended image1
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை.. அதிர்ச்சியில் குடிமகன்கள்
Recommended image2
இரண்டு நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்.! ஆட்சியர்கள் அதிரடி.! பேரதிர்ச்சியில் குடிமகன்கள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved