MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • இன்னும் ஒரே நாள் விஜய் கதை தெரிந்து விடும்..! உச்ச நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு

இன்னும் ஒரே நாள் விஜய் கதை தெரிந்து விடும்..! உச்ச நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு

தவெக கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்குகளில் உச்சநீதிமன்றம் நாளை முக்கிய உத்தரவினை பிறப்பிக்க உள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar r
Published : Oct 12 2025, 08:09 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
கரூர் கூட்ட நெரிசல்
Image Credit : Asianet News

கரூர் கூட்ட நெரிசல்

தவெக தலைவர், நடிகர் விஜயின் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது இந்தியா முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பான வழக்குகளை கையில் எடுத்த உயர்நீதிமன்றம், இது குறித்து முழுமையாக விசாரிக்க அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு விசாரணை அமைத்து உத்தரவிட்டார். மேலும் நீதிபதி செந்தில் குமார் தவெக மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தது கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

24
உச்சநீதிமன்றத்தில் விசாரணை
Image Credit : Getty

உச்சநீதிமன்றத்தில் விசாரணை

உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தவெக உச்சநீதிமன்றம் சென்றது. மேலும் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்ட சில குடும்பங்களும் கரூர் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என மனுதாக்கல் செய்தனர். அனைத்து மனுக்களையும் விசாரித்த நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி மற்றும் என்.வி. அஞ்சரியா அடங்கிய அமர்வு, உயர்நீதிமன்றத்துக்கு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியது.

அடுக்கடுக்கான கேள்விகள்

தேர்தல் பிரச்சார நெறிமுறை தொடர்பான வழக்கில், விஜய் தொடர்பான கருத்துகளை உயர்நீதிமன்றம் ஏன் முன்வைத்தது? அது கிரிமினல் வழக்காக மாற்றப்பட்டது எப்படி? மதுரை கிளைக்கு ஒதுக்கப்பட்ட வழக்கை சென்னை கிளை ஏன் விசாரித்தது? விஜய் தரப்பினரின் வாதத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பித்தது ஏன்? என பல்வேறு கேள்விகளை உச்சநீதிமன்றம் எழுப்பியது.

Related Articles

Related image1
திமுகவுக்கு சாதகமா போயிடுச்சே..! ஜான்- புஸ்ஸி மீது கடுப்பில் விஜய்..! புது ரூட்டில் தவெக..!
Related image2
தவெக-விடம் உயர்நீதிமன்றம் நடந்து கொண்டது அதிமேதாவித் தனம்..! உச்சநீதிமன்றம் காட்டம்..!
34
சிபிஐ விசாரணை வேண்டும்
Image Credit : X

சிபிஐ விசாரணை வேண்டும்

கரூர் சம்பவம் நடந்த உடன் ஒரே இரவில் 30 உடல்களை பிரேத பரிசோதனை செய்துள்ளனர். அதிகாலை 3 மணிக்கு அனைத்து உடல்களும் எரிக்கப்பட்டுள்ளன. 30 உடல்களை பிரேத பரிசோதனை செய்ய மருத்துவர்கள் உடனடியாக எங்கிருந்து வந்தனர்? என்ற கேள்வியை பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் முன்வைத்தனர். மேலும் மாநில போலீஸ் விசாரித்தால் உண்மை வெளிவராது. ஆகவே சிபிஐ விசாரிக்க வேண்டும் என வாதிடப்படது.

தமிழக அரசு விளக்கம்

இதற்கு தமிழ அரசு சார்பில் 'விஜய் தாமதமாக வந்ததே விபத்துக்கு காரணம். இந்த வழக்கில் சிறப்பு புலனாய்வு விசாரணை சிறப்பாக நடைபெறுவதால் சிபிஐ விசாரணை தேவையில்லை' என்று கூறியதுடன் போஸ்ட் மார்ட்டம் உள்ளிட்ட சந்தேகங்களுக்கும் விளக்கம் அளித்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை நாளை (திங்கட்கிழமை) ஒத்திவைத்தனர்.

44
உச்சநீதிமன்ற தீர்ப்பு எப்படி இருக்கும்?
Image Credit : Asianet News

உச்சநீதிமன்ற தீர்ப்பு எப்படி இருக்கும்?

தமிழ்நாடே எதிர்பார்க்கும் இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்க உள்ளது. இந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் நாளை சிறப்பு புலனாய்வு விசாரணையை ரத்து செய்து விட்டு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடலாம். அல்லது சிறப்பு புலனாய்வு விசாரணையே தொடரும் என்றும் கூறலாம். விஜய் மற்றும் தவெக மீதான குற்றச்சாட்டுகளை தீர்க்கும் வகையில் புதிய வழிகாட்டுதல்கள் வழங்கலாம்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
tvk நெரிசல்
டிவி.கே. விஜய்
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Recommended image1
நெருங்கும் தேர்தல்.. டெண்டர்களை அள்ளி வீசும் திமுக..! டிடிவி தினகரன் ஆவேசம்
Recommended image2
கிடைத்தவரை வாரி சுருட்டும் திமுக.. அவசர அவசரமாக 50 குவாரிகள் ஏலம்.. விளாசும் அன்புமணி
Recommended image3
வெயிலுக்கு குட்பை.. 10 மாவட்டங்களில் பொளக்கப் போகும் மழை.. வானிலை மையத்தின் 'ஜில்' அப்டேட்!
Related Stories
Recommended image1
திமுகவுக்கு சாதகமா போயிடுச்சே..! ஜான்- புஸ்ஸி மீது கடுப்பில் விஜய்..! புது ரூட்டில் தவெக..!
Recommended image2
தவெக-விடம் உயர்நீதிமன்றம் நடந்து கொண்டது அதிமேதாவித் தனம்..! உச்சநீதிமன்றம் காட்டம்..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved