MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • கழிவறையில் அலறி கூச்சலிட்ட பெண் போலீஸ்! வசமாக சிக்கிய எஸ்எஸ்ஐ! நடந்தது என்ன?

கழிவறையில் அலறி கூச்சலிட்ட பெண் போலீஸ்! வசமாக சிக்கிய எஸ்எஸ்ஐ! நடந்தது என்ன?

பரமக்குடியில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர்கள் பயன்படுத்திய கழிவறையில், செல்போன் மூலம் ரகசியமாக வீடியோ பதிவு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பரமக்குடி நகர் காவல் நிலைய எஸ்எஸ்ஐ போலீசார் கைது செய்தனர்.

1 Min read
Author : vinoth kumar
Published : Jan 19 2026, 01:44 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
பெண் காவலர் பாதுகாப்பு பணி
Image Credit : Asianet News

பெண் காவலர் பாதுகாப்பு பணி

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இமானுவேல்சேகரன் மணிமண்டபம் திறப்பு விழா நடைபெற்றது. இதற்காக திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். இந்நிலையில் மணி நகர் பகுதியில் உள்ள புறநகர் காவல் சோதனைச் சாவடியில் பெண் காவலர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

24
கழிவறையில் செல்போன்
Image Credit : our own

கழிவறையில் செல்போன்

அப்போது அங்கு, பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் வாகன ரோந்து பிரிவில் பணியாற்றும் எஸ்எஸ்ஐ முத்துப்பாண்டி (58) பணியில் இருந்துள்ளார். பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீசார் சோதனைச்சாவடி மையத்தில் உள்ள கழிவறையை பயன்படுத்தி வந்துள்ளனர். மூன்று பெண் போலீசார் கழிவறைக்கு சென்று வந்த நிலையில், நான்காவதாக சென்றவர் வாஷ்பேஸின் கீழ் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் கருப்பு கலரில் ஒரு கவர் இருந்துள்ளது.

Related Articles

Related image1
பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று திடீர் விடுமுறை அறிவிப்பு.. குஷியில் துள்ளிக்குதிக்கும் மாணவர்கள்!
Related image2
பொங்கல் முடிந்த கையோடு பொதுமக்களுக்கு அதிர்ச்சி.. மின்தடை குறித்து மின்வாரியம் வெளியிட்ட முக்கிய தகவல்!
34
பரமக்குடி நகர் காவல் நிலையம்
Image Credit : our own

பரமக்குடி நகர் காவல் நிலையம்

இதனால் சந்தேகமடைந்த பெண் காவலர் அதை எடுத்து பார்த்த போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதில், ஒரு செல்போன் இருந்தது. அந்த செல்போனில் வீடியோ பதிவாகி கொண்டிருந்தது. இதுதொடர்பாக அந்த செல்போனை எடுத்து பாதுகாப்பு உயர் அதிகாரியிடம் கொடுத்தார். இதையடுத்து அந்த செல்போன் பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்டது.

44
எஸ்எஸ்ஐ முத்துப்பாண்டியன் கைது
Image Credit : our own

எஸ்எஸ்ஐ முத்துப்பாண்டியன் கைது

பின்னர் செல்போனை ஆய்வு செய்தபோது, அது பரமக்குடி எஸ்எஸ்ஐ முத்துப்பாண்டியின் செல்போன் என்பது தெரியவந்தது. இதுகுறித்து பெண் காவலர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துப்பாண்டியை கைது செய்தனர். கைதான முத்துப்பாண்டி ஏற்கனவே சர்ச்சையில் சிக்கியதை அடுத்து இடமாற்றம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பெண்கள்
காவல்
தமிழ்நாடு குற்றச் செய்திகள்
காவல் நிலையம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
வங்கக்கடலில் புயல்? தமிழகத்தில் ஓயாமல் ஊத்தப்போகும் மழை.. வானிலை கொடுத்த சூப்பர் அப்டேட்!
Recommended image2
அடேங்கப்பா.! சென்னை மத்திய கைலாஷ் L வடிவ மேம்பாலம்! இவ்வளவு சிறப்பு அம்சங்கள் இருக்கா.!
Recommended image3
நயினார் எந்த பெண்ணின் மனம் புண்படும் வகையில் பேசினாரோ.. அந்த பெண்ணிடம்.. எம்.பி.சுதா சரவெடி!
Related Stories
Recommended image1
பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று திடீர் விடுமுறை அறிவிப்பு.. குஷியில் துள்ளிக்குதிக்கும் மாணவர்கள்!
Recommended image2
பொங்கல் முடிந்த கையோடு பொதுமக்களுக்கு அதிர்ச்சி.. மின்தடை குறித்து மின்வாரியம் வெளியிட்ட முக்கிய தகவல்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved