MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • 1000 லிட்டருக்கு வெறும் ரூ.1.50 தானா? ஆறு காயுது.. கம்பெனி லாபம் சம்பாதிக்குதா? உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி!

1000 லிட்டருக்கு வெறும் ரூ.1.50 தானா? ஆறு காயுது.. கம்பெனி லாபம் சம்பாதிக்குதா? உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி!

Thamirabarani Water தாமிரபரணி நீர் வரி விவகாரம் மற்றும் தொழிற்சாலைகளின் வரி பாக்கி தொடர்பாகத் தமிழக அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு பற்றிய முழு விவரங்கள்.

1 Min read
Author : Suresh Manthiram
Published : Nov 23 2025, 09:00 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Thamirabarani Water உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு
Image Credit : Gemini

Thamirabarani Water உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

தாமிரபரணி ஆற்றிலிருந்து தொழிற்சாலைகளுக்கு விநியோகிக்கப்படும் தண்ணீருக்கான வரி விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. தொழிற்சாலைகள் செலுத்தும் வரி, நிலுவைத் தொகை மற்றும் எந்தெந்த நிறுவனங்கள் தண்ணீர் எடுக்கின்றன என்ற விவரங்களை உடனடியாகத் தாக்கல் செய்ய வேண்டும் எனத் தமிழக அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

பொதுநல வழக்கு பின்னணி

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரைச் சேர்ந்த காமராஜ் என்பவர் இது தொடர்பாகப் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் தாமிரபரணி ஆற்றிலிருந்து, வணிக நோக்கத்திற்காகப் பல்வேறு தொழிற்சாலைகளுக்குத் தண்ணீர் விநியோகிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டியிருந்தார்.

24
25 ஆண்டுகளாக மாறாத கட்டணம்
Image Credit : Gemini

25 ஆண்டுகளாக மாறாத கட்டணம்

இந்த வழக்கில் முன்வைக்கப்பட்ட மிக முக்கியமான குற்றச்சாட்டு, 1998-ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட தண்ணீர் கட்டணமே இப்போதும் தொடர்வதுதான். கடந்த 1998-ல் தமிழகப் பொதுப்பணித்துறை வெளியிட்ட அரசாணைப்படி, 1000 லிட்டர் தண்ணீருக்கு வெறும் 1 ரூபாய் 50 காசுகள் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. 25 ஆண்டுகளுக்கு மேலாகியும், தொழில்மயமாக்கம் அதிகரித்தும், இக்கட்டணத்தை மாற்றியமைக்க அரசு எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை என மனுதாரர் கவலை தெரிவித்துள்ளார்.

Related Articles

Related image1
தலை தப்பிய கெளதம் கம்பீர்..! பெரும் நிம்மதி அளித்த உயர்நீதிமன்றம்..! என்ன விஷயம்?
Related image2
கோயில் நிதியில் வணிக வளாகங்கள் கட்டக் கூடாது! தமிழக அரசுக்கு எதிராக ஒரே போடாக போட்ட உயர்நீதிமன்றம்!
34
அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பு
Image Credit : Gemini

அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பு

தனியார் நிறுவனங்கள் லாபமடைய வழிவகுக்கும் இந்த பழைய கட்டண முறையால், அரசுக்குப் பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. பல தொழிற்சாலைகள் கோடிக்கணக்கில் தண்ணீர் வரியைச் செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளன. இதனால் நிதி பற்றாக்குறை ஏற்பட்டு, தாமிரபரணி ஆற்றைத் தூர்வாரக் கூட முடியாத சூழல் உருவாகியுள்ளது. எனவே, ஆக்கிரமிப்பாளர்களை அகற்றுவதுடன், தண்ணீர் கட்டணத்தை மாற்றியமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

44
டிசம்பர் 4ஆம் தேதி கெடு
Image Credit : our own

டிசம்பர் 4ஆம் தேதி கெடு

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் பி. புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முக்கிய உத்தரவைப் பிறப்பித்தது. அதில், "எந்தெந்த நிறுவனங்கள் தண்ணீர் எடுக்கின்றன? அவற்றின் வரி நிலுவை எவ்வளவு?" என்ற முழு விவரங்களைத் தமிழக நீர்வளத்துறைச் செயலரும், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரும் வரும் டிசம்பர் 4-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

About the Author

SM
Suresh Manthiram
இவர் தொடர்பியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். மேலும் காட்சி தொடர்பியல் துறையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். செய்தி எழுதுவதில் எட்டு ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ள இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் பகுதி நேர ஊடகவியலாளராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்திருப்பதுடன், அதில் அனுபவமும் பெற்றிருக்கிறார். கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் செய்திகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்.
தமிழ்நாடு
திருநெல்வேலி

Latest Videos
Recommended Stories
Recommended image1
வங்கக்கடலில் புயல்? தமிழகத்தில் ஓயாமல் ஊத்தப்போகும் மழை.. வானிலை கொடுத்த சூப்பர் அப்டேட்!
Recommended image2
அடேங்கப்பா.! சென்னை மத்திய கைலாஷ் L வடிவ மேம்பாலம்! இவ்வளவு சிறப்பு அம்சங்கள் இருக்கா.!
Recommended image3
நயினார் எந்த பெண்ணின் மனம் புண்படும் வகையில் பேசினாரோ.. அந்த பெண்ணிடம்.. எம்.பி.சுதா சரவெடி!
Related Stories
Recommended image1
தலை தப்பிய கெளதம் கம்பீர்..! பெரும் நிம்மதி அளித்த உயர்நீதிமன்றம்..! என்ன விஷயம்?
Recommended image2
கோயில் நிதியில் வணிக வளாகங்கள் கட்டக் கூடாது! தமிழக அரசுக்கு எதிராக ஒரே போடாக போட்ட உயர்நீதிமன்றம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved