MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • நாளை முதல் கத்தரி வெயில் ஆரம்பித்தாலும்! தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன முக்கிய தகவல்!

நாளை முதல் கத்தரி வெயில் ஆரம்பித்தாலும்! தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன முக்கிய தகவல்!

தமிழகத்தில் மே 4 முதல் கத்திரி வெயில் தொடங்குகிறது. முதல் வாரம் வெயிலின் தாக்கம் குறைவாக இருக்கும். ஆந்திராவை ஒட்டிய வேலூர் பகுதியில் 39-40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை தொடர்ந்து இருக்கும்.

1 Min read
Author : vinoth kumar
| Updated : May 03 2025, 02:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
heatwave

heatwave

தமிழகத்தில் பிப்ரவரி மாதம் தொடக்கத்தில் இருந்தே வெயில் வாட்டி வதைத்து வந்தது. அதுவும் ஏப்ரல் மாதம் முதல் கோடை வெயில் தொடங்கியதை அடுத்து பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரி தாண்டி வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வீட்டை விட்டு வெளியில் செல்வதை முற்றிலுமாக தவிர்த்து வருகின்றனர். குறிப்பாக கர்ப்பிணி மற்றும் வயதானவர்கள் தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என சுகாதாரத்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டது. இப்பவே வெயில் இப்படியென்றால் கத்திரி வெயிலின் தாக்கம் எப்படி இருக்குமோ என்ற புலம்பி வந்த மக்களுக்கு அதிர்ச்சி செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. 

24
heatwave

heatwave

அதாவது தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 4-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயில் தொடங்குகிறது. இந்நிலையில் 25 நாட்களுக்கு நீடிக்கும் கத்திரி வெயில் முதல் 7 நாட்கள் வெப்பத்தின் அளவு மெதுவாக அதிகரிக்கத் தொடங்கும். மத்தியில் இருக்கும் 7 நாட்கள் வெப்பத்தின் தாக்கம் கடுமையாக இருக்கும். அடுத்த நாட்களில் வெப்பம் குறையத் தொடங்கும். 

Related Articles

Related image1
மாதத்தின் முதல் நாளே பொதுமக்களுக்கு இன்ப அதிர்ச்சி! சிலிண்டர் விலை குறைந்தது!
Related image2
மழைக்கு நாள் குறித்த வானிலை மையம்! 6 மாவட்டங்களில் அலறவிடப்போகுதாம்!
34

இந்நிலையில், கத்திரி வெயில் நாளை தொடங்கினாலும், ஒரு வாரத்துக்கு வெயிலின் தாக்கம் குறைவாகவே இருக்கும் என பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: கத்தரி வெயில் நாளை தொடங்கினாலும், மழை காரணமாக அடுத்த ஒரு வாரத்துக்கு வெயிலின் தாக்கம் குறைவாகவே இருக்கும். கடந்த 2024 ஏப்ரல் மாதத்தைப் போலல்லாமல், இந்தாண்டு ஏப்ரல் மாதம் தமிழகத்திற்கு மிகவும் நல்ல மாதமாக இருந்தது. அவ்வப்போது மழை பெய்தது. 

44
heatwave

heatwave

ஆந்திராவுக்கு மிக அருகில் உள்ள வேலூர் பகுதியில் 39-40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை தொடர்ந்து இருக்கும். இது இப்பகுதிக்கு இயல்பானது. அங்கும் மழை தொடர்ந்து பெய்யும் என தெரிவித்துள்ளார். 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மழை செய்திகள்
தமிழ்நாடு மழை
தமிழ்நாடு வானிலை அறிக்கை
வெப்ப அலை
தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்

Latest Videos
Recommended Stories
Recommended image1
வங்கக்கடலில் புயல்? தமிழகத்தில் ஓயாமல் ஊத்தப்போகும் மழை.. வானிலை கொடுத்த சூப்பர் அப்டேட்!
Recommended image2
அடேங்கப்பா.! சென்னை மத்திய கைலாஷ் L வடிவ மேம்பாலம்! இவ்வளவு சிறப்பு அம்சங்கள் இருக்கா.!
Recommended image3
நயினார் எந்த பெண்ணின் மனம் புண்படும் வகையில் பேசினாரோ.. அந்த பெண்ணிடம்.. எம்.பி.சுதா சரவெடி!
Related Stories
Recommended image1
மாதத்தின் முதல் நாளே பொதுமக்களுக்கு இன்ப அதிர்ச்சி! சிலிண்டர் விலை குறைந்தது!
Recommended image2
மழைக்கு நாள் குறித்த வானிலை மையம்! 6 மாவட்டங்களில் அலறவிடப்போகுதாம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved