MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் இடியுடன் கூடிய கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்?

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் இடியுடன் கூடிய கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்?

தமிழகத்தில் கத்திரி வெயில் தொடங்கிய நிலையில், எதிர்பார்த்த அளவு வெயில் இல்லாமல் மழை பெய்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. 

1 Min read
Author : vinoth kumar
| Updated : May 23 2025, 01:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
கத்திரி வெயில்
Image Credit : Asianet News

கத்திரி வெயில்

தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் முதலே வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதனால் பொதுமக்கள் சொல்ல முடியாத அளவுக்கு துயரம் அடைந்தனர். பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியில் செல்வதை முற்றிலுமாக தவிர்த்து வந்தனர். இந்நிலையில் கத்திரி வெயில் மே 4ம் தேதி தொடங்கியதில் எப்படி இருக்க போகிறதோ என்று பொதுமக்கள் அஞ்சு நடுங்கினர். ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு வெயில் இல்லாததால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து குளிர்ச்சியான சூழலை ஏற்படுத்தியுள்ளது.

24
தென்மேற்கு பருவமழை
Image Credit : our own

தென்மேற்கு பருவமழை

இந்நிலையில் தென்மேற்கு பருவமழை கேரளாவில் அடுத்த ஒரிரு தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதேபோல் அரபிக் கடலில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Related Articles

Related image1
குரூப் 4 தேர்வர்கள் கவனத்திற்கு! இன்றுடன் கடைசி! வெளியான முக்கிய அறிவிப்பு!
Related image2
லாரி லாரியாக வந்தாலும் தக்காளி, வெங்காயம் விலை உயர்வு! ஒரு கிலோ எவ்வளவு? காய்கறி நிலவரம் என்ன?
34
லேசானது முதல் மிதமான மழை
Image Credit : our own

லேசானது முதல் மிதமான மழை

இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில லேசான பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

44
3 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை
Image Credit : our own

3 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை

இந்நிலையில் அடுத்த 3 மணிநேரத்தில் அதாவது (பகல் 1 மணி வரை) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 3 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு மழை
கனமழை
வெப்ப அலை
சென்னை வானிலை ஆய்வு மையம்
மழை செய்திகள்
வானிலை

Latest Videos
Recommended Stories
Recommended image1
வங்கக்கடலில் புயல்? தமிழகத்தில் ஓயாமல் ஊத்தப்போகும் மழை.. வானிலை கொடுத்த சூப்பர் அப்டேட்!
Recommended image2
அடேங்கப்பா.! சென்னை மத்திய கைலாஷ் L வடிவ மேம்பாலம்! இவ்வளவு சிறப்பு அம்சங்கள் இருக்கா.!
Recommended image3
நயினார் எந்த பெண்ணின் மனம் புண்படும் வகையில் பேசினாரோ.. அந்த பெண்ணிடம்.. எம்.பி.சுதா சரவெடி!
Related Stories
Recommended image1
குரூப் 4 தேர்வர்கள் கவனத்திற்கு! இன்றுடன் கடைசி! வெளியான முக்கிய அறிவிப்பு!
Recommended image2
லாரி லாரியாக வந்தாலும் தக்காளி, வெங்காயம் விலை உயர்வு! ஒரு கிலோ எவ்வளவு? காய்கறி நிலவரம் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved