MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • வலுவிழந்தாலும் ஆட்டம் காட்டும் டிட்வா.. 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

வலுவிழந்தாலும் ஆட்டம் காட்டும் டிட்வா.. 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

சென்னை அருகே இரண்டு நாட்களாக ஒரே பகுதியில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மழை காரணமாக 4 மாவட்டங்களில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை.

1 Min read
Author : Velmurugan s
Published : Dec 02 2025, 07:01 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
4 மாவட்டங்களில் கனமழை
Image Credit : Getty

4 மாவட்டங்களில் கனமழை

வங்கக்கடலில் உருவான டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துவிட்டது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பல மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ளதால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று காலை முதல் கனமழை பெய்தது. சென்னையில் இருந்து 50 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் விட்டு விட்டு கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

23
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
Image Credit : x

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தொடர் கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திங்கள் கிழமை காலை தொடங்கிய கனமழை மாலை வரை நீடித்ததால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியது. குறிப்பாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் குளம் போல் தேங்கியதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.

Related Articles

Related image1
சென்னைக்கு ரெட் அலர்ட்..! அடிச்சு ஊத்தப்போகும் அதி கனமழை..! கவனம் மக்களே!
Related image2
5 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்.. இன்று இந்த மாவட்டங்களில் எல்லாம் மழை வெளுக்கப்போகுது.. முழு விபரம்
33
இயல்பு வாழ்க்கை பாதிப்பு
Image Credit : x

இயல்பு வாழ்க்கை பாதிப்பு

சென்னையின் பல்வேறு பகுதிகளில் மெட்ரோ பணி, மழைநீர் வடிகால் பணி, பறக்கும் ரயில்வே திட்டப் பணி உள்ளிட்ட பணிகள் நடைபெறும் பள்ளிக்கரணை, சோழிங்கநல்லூர், துரைப்பாக்கம், மேடவாக்கம், பெரும்பாக்கம், போரூர், மணப்பாக்கம், ராமாபுரம், பூந்தமல்லி, ஆதம்பாக்கம், நங்கநல்லூர் ஆகிய பகுதிகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கனமழை
மழை செய்திகள்
வானிலை அறிக்கை
சென்னை
விடுமுறை
பள்ளிகள் விடுமுறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
இலங்கைக்கு உதவிய தமிழகம்: புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 950 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு
Recommended image2
இப்படியொரு ப்ளானா..? டபுள் ஸ்டாண்ட் விஜயின்..! என்.டி.ஏ கூட்டணிக்கு கேட் போடும் ராகுல்..! திமுகவுக்கு திருகுவலி..!
Recommended image3
திருமா தில்லுமுல்லு நாடகம்போடுகிறார்..! பட்டியல் சமூக மக்களுக்காக போராடுவது பாமகதான்..! வழக்கறிஞர் பாலு பளீர்..!
Related Stories
Recommended image1
சென்னைக்கு ரெட் அலர்ட்..! அடிச்சு ஊத்தப்போகும் அதி கனமழை..! கவனம் மக்களே!
Recommended image2
5 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்.. இன்று இந்த மாவட்டங்களில் எல்லாம் மழை வெளுக்கப்போகுது.. முழு விபரம்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved