MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • திருச்செந்தூர் முருகன் கோவிலில் அதிர்ச்சி! சோகத்தில் பக்தர்கள்! நடந்தது என்ன?

திருச்செந்தூர் முருகன் கோவிலில் அதிர்ச்சி! சோகத்தில் பக்தர்கள்! நடந்தது என்ன?

Tiruchendur Murugan Temple: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடலில் புனித நீராடிய கோவை மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் என்ற பக்தர், கடல் அலையில் சிக்கி உயிரிழந்தார். அவருக்கு ஏற்கனவே வலிப்பு நோய் இருந்ததாக கூறப்படுகிறது. 

1 Min read
Author : vinoth kumar
Published : Oct 09 2025, 08:34 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்
Image Credit : Asianet News

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்

தமிழ் கடவுளான முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இக்கோவில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் அமைந்துள்ளது. அழகிய கடற்கரையோரம் அமைந்துள்ளது. இதனால் இங்கு வரும் பக்தர்கள் கடலில் புனித நீராடுவதை பெரும் பாக்கியமாக கருதுகின்றனர்.

24
பக்தர்கள் தரிசனம்
Image Credit : Asianet News

பக்தர்கள் தரிசனம்

இக்கோவிலுக்கு பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். அதுவும் வார விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை வந்துவிட்டால் சாமியை தரிசனம் செய்யவே கிட்டத்தட்ட 5 மணிநேரம் ஆகிவிடும். அந்த அளவுக்கு கூட்டம் அலைமோதும்.

Related Articles

Related image1
சின்ன பொண்ணுன்னு கூட பார்க்காமல்! ரூமில் வைத்து! வசமாக சிக்கிய திமுக பிரமுகர், துணை நடிகர்!
Related image2
தமிழகத்தில் 15 மாவட்டங்களில் பிச்சு உதறப்போகுதாம் கனமழை! லிஸ்ட்ல சென்னை இருக்கா?
34
கடலில் மூழ்கிய பக்தர்
Image Credit : Asianet News

கடலில் மூழ்கிய பக்தர்

இந்நிலையில் கோவை மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்த மணிகண்டன் (38). என்பவர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் முன்புள்ள கடலில் புனித நீராடிய போது கடல் அலையில் சிக்கி மூழ்கினார். கோவில் கடல் பக்தர் பாதுகாப்பு குழுவினர் மற்றும் மரைன் போலீசார் அவரை ஒருவழியாக மீட்டு கோவில் ஆம்புலன்ஸ் மூலம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

44
போலீஸ் விசாரணை
Image Credit : Google

போலீஸ் விசாரணை

இதனையடுத்து அவரை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த மணிகண்டனுக்கு ஏற்கனவே வலிப்பு நோய் இருந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடலில் குளித்த பக்தர் அலையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சக பக்தர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு
காவல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
வங்கக்கடலில் புயல்? தமிழகத்தில் ஓயாமல் ஊத்தப்போகும் மழை.. வானிலை கொடுத்த சூப்பர் அப்டேட்!
Recommended image2
அடேங்கப்பா.! சென்னை மத்திய கைலாஷ் L வடிவ மேம்பாலம்! இவ்வளவு சிறப்பு அம்சங்கள் இருக்கா.!
Recommended image3
நயினார் எந்த பெண்ணின் மனம் புண்படும் வகையில் பேசினாரோ.. அந்த பெண்ணிடம்.. எம்.பி.சுதா சரவெடி!
Related Stories
Recommended image1
சின்ன பொண்ணுன்னு கூட பார்க்காமல்! ரூமில் வைத்து! வசமாக சிக்கிய திமுக பிரமுகர், துணை நடிகர்!
Recommended image2
தமிழகத்தில் 15 மாவட்டங்களில் பிச்சு உதறப்போகுதாம் கனமழை! லிஸ்ட்ல சென்னை இருக்கா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved