MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • சென்னையில் சாலையோரங்களில் இலவச ஏசி ஓய்வறை.! நாளை முதல் ஊழியர்களுக்கு கொண்டாட்டம்

சென்னையில் சாலையோரங்களில் இலவச ஏசி ஓய்வறை.! நாளை முதல் ஊழியர்களுக்கு கொண்டாட்டம்

பல்வேறு நாடுகளில் வீட்டிற்கு உணவு டெலிவரி சேவை அதிகரித்துள்ளது. டெலிவரி ஊழியர்களின் நலன் கருதி, சென்னை மாநகராட்சி சார்பாக சாலையோரங்களில் ஏசி ஓய்வறைகளை அமைக்கப்பட்டுள்ளது. 

2 Min read
Author : Ajmal Khan
Published : Jun 10 2025, 02:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
வீடு தேடி வரும் உணவு பொருட்கள்
Image Credit : our own

வீடு தேடி வரும் உணவு பொருட்கள்

நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாகவே வீட்டிற்குள் இருந்தே உணவு பொருட்கள் முதல் வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களும் வாங்கிட முடியும். இதன் காரணமாக பல லட்சம் இளைஞர்கள் மட்டுமல்ல பெண்களுக்கும் வேலைவாய்ப்பு உருவாகியுள்ளது. 

மழை, வெயில் என எந்த காலமாக இருந்தாலும் அழைந்து திரிந்து உணவுகளை வாங்கி வந்து வீட்டில் டெலிவரி செய்யப்பட்டு வருகிறது. சென்னை போன்ற பெரு நகரங்களில் ஸ்விக்கி, ஸ்மோட்டோ போன்ற உணவு டெலிவரி சேவை செய்யும் நிறுவனங்கள் 24 மணி நேர உணவு டெலிவரி சேவையை வழங்கி வருகின்றன.

24
டெலிவரி ஊழியர்களுக்கு குட் நியூஸ்
Image Credit : iSTOCK

டெலிவரி ஊழியர்களுக்கு குட் நியூஸ்

இந்த நிறுவனங்களில், உணவு டெலிவரி செய்யும் வேலையில், ஆயிரக்கணக்கான ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த ஊழியர்கள் மழை, வெயில் போன்ற கடினமான சூழல்களில் கூட டெலிவரி செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. ஒதுங்குவதற்கு கூட சரியான இடம் இல்லாத நிலை உள்ளது. அதிலும் இந்த டெலிவரி ஊழியர்களில் 10 சதவீதம் பேர் பெண்கள் ஆவார்கள். இந்த ஊழியர்களுக்கு குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாகவே உள்ளது.

Related Articles

Related image1
கணவருக்கு தெரியாமல் ரூம் போட்ட மனைவி! 17 முறை கத்தியால் குத்தி கொலை செய்த கள்ளக்காதலன்!
Related image2
சுய உதவி குழுவிற்கு இவ்வளவு கம்மி வட்டியில் ஒரு லட்சம் ரூபாய் வரை கடனா.! தமிழக அரசு குஷியான அறிவிப்பு
34
சாலையோரங்களில் ஏசி ஓய்வறை
Image Credit : our own

சாலையோரங்களில் ஏசி ஓய்வறை

அவசர தேவைகளுக்காக ஒதுங்க கூட முடியாத நிலை நீடிக்கிறது. கொளுத்தும் வெயிலிலும், மழையிலும் சாலையோரங்களில் ஒதுங்கி நிற்கும் நிலை உள்ளது. இதனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் முதல் முறையாக உணவு டெலிவிரி செய்யும் ஊழியர்களுக்காக ஏசி ஓய்வரை பயன்பாட்டிற்கு கொண்டு வர சென்னை மாநகராட்சி முடிவு செய்திருந்தது.

 தற்போது இந்த திட்டம் நாளை முதல் தொடங்கப்டவுள்ளது. சோதனை அடிப்படையில், அண்ணா நகர், கே.கே.நகரில் நாளை முதல் திறக்கப்படுகிறது.

44
ஏசி ஓய்வறை வசதிகள் என்ன.?
Image Credit : Asianet News

ஏசி ஓய்வறை வசதிகள் என்ன.?

இதில் 600 சதுரடி பரப்பளவில் அமையவுள்ள இந்த ஓய்வறையில், 20 அடி நீளம் 10 அடி அகலத்தில் கழிவறை, குடிநீர், செல்போன் சார்ஜ் செய்யும் வசதிகள் இருக்கும், 25 பேர் வரை ஒரே நேரத்தில் பயன்படுத்த முடியும், மேலும் 20 டூவிலர் வரை பார்க்கிங் செய்யும் முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடுத்தக்கட்டமாக நுங்கம்பாக்கம், ராயப்பேட்டை, மயிலாப்பூர், தி. நகர் போன்ற பகுதிகளில் குளிரூட்டப்பட்ட ஓய்வு அறைகள் அமைக்கப்படவுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
தமிழ் செய்திகள்
தமிழ்நாடு அரசு
உணவு
ஜொமேட்டோ
சென்னை மாநகராட்சி

Latest Videos
Recommended Stories
Recommended image1
அதிகாலையிலேயே கோர விபத்து! இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதல்! 5 பேர் சம்பவ இடத்திலேயே ப*லி
Recommended image2
Tamil News Live today 06 December 2025: அதிகாலையிலேயே கோர விபத்து! இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதல்! 5 பேர் சம்பவ இடத்திலேயே ப*லி
Recommended image3
இந்த ஐந்து நாள் பயிற்சி போய்ட்டு வந்தாலே போதும்! கை நிறைய சம்பாதிக்கலாம்! உங்க லைஃப் டோட்டலா மாறிடும்!
Related Stories
Recommended image1
கணவருக்கு தெரியாமல் ரூம் போட்ட மனைவி! 17 முறை கத்தியால் குத்தி கொலை செய்த கள்ளக்காதலன்!
Recommended image2
சுய உதவி குழுவிற்கு இவ்வளவு கம்மி வட்டியில் ஒரு லட்சம் ரூபாய் வரை கடனா.! தமிழக அரசு குஷியான அறிவிப்பு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved