MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • காஞ்சிபுரம்
  • மாணவர்கள் குஷியோ குஷி! நாளை பள்ளிகளுக்கு திடீர் விடுமுறை அறிவிப்பு! என்ன காரணம்?

மாணவர்கள் குஷியோ குஷி! நாளை பள்ளிகளுக்கு திடீர் விடுமுறை அறிவிப்பு! என்ன காரணம்?

காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஏகாம்பரநாதர் கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. 28 கோடி ரூபாய் செலவில் திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில், டிசம்பர் 8ம் தேதி நடைபெறும் இவ்விழாவிற்காக மாவட்ட பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை.

1 Min read
Author : vinoth kumar
Published : Dec 07 2025, 08:22 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
ஸ்ரீ ஏகாம்பரநாதர் கோயில்
Image Credit : Asianet News

ஸ்ரீ ஏகாம்பரநாதர் கோயில்

பஞ்சபூத ஸ்தலங்கள் என்பது சிவனுக்கு உரிய மிக முக்கிய கோவில்களாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் தொன்மையான திருக்கோவில்களில் ஒன்றாக ஸ்ரீ ஏகாம்பரநாதர் கோயில் உள்ளது. இக்கோவில் 17 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டது. இதற்காக இந்து அறநிலைத்துறை சார்பில் 12 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மீதமுள்ள 16 கோடி ரூபாய் நிதி உபயதாரர்கள் மூலம், வசூலிக்கப்பட்டு கோவில் திருப்பணிகள் வேகமாக நடைபெற்று வந்தன.

23
ஸ்ரீ ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம்
Image Credit : Asianet News

ஸ்ரீ ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம்

அதாவது மொத்தம் ஏகாம்புநாதர் கோயில் திருப்பணிகள் 28 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றது. குறிப்பாக ஏகாம்பரநாதர் கோயிலில் பிரதான ராஜகோபுரத்தின் பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில் ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம் டிசம்பர் 8ம் தேதி காலை 5.45 மணிக்கு நடைபெறும் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருந்தார்.

Related Articles

Related image1
குடிமகன்களுக்கு பேரதிர்ச்சி! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு 8 நாட்கள் விடுமுறை!
Related image2
வேலைக்கு போற அவசரத்துல இதை மறந்துடாதீங்க! தமிழகம் முழுவதும் நாளை 8 மணி நேரம் மின்தடை!
33
பள்ளிகளுக்கு விடுமுறை
Image Credit : Getty

பள்ளிகளுக்கு விடுமுறை

இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றது. 17 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் கும்பாபிஷேகம் என்பதால் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது. இந்நிலையில் டிசம்பர் 8ம் தேதியான நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள 149 பள்ளிகளுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை என முதன்மை கல்வி அலுவலர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பள்ளி மாணவர்
விடுமுறை
பள்ளிகள் விடுமுறை
கோவில்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தம்பி சமாதியில் பட்டா கத்தியுடன் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம்.! அண்ணனை அலேக்கா தூக்கிய போலீஸ்.!
Recommended image2
கரூர பத்தி அப்புறமா பேசறேன்..! எல்லாத்துக்கும் மொத்தமா பதில் சொல்றேன்.. விஜய்
Recommended image3
என்னது! வசூல்ராஜாவை நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்தது கல்லூரி மாணவர்களா? வெளியான பகீர் தகவல்!
Related Stories
Recommended image1
குடிமகன்களுக்கு பேரதிர்ச்சி! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு 8 நாட்கள் விடுமுறை!
Recommended image2
வேலைக்கு போற அவசரத்துல இதை மறந்துடாதீங்க! தமிழகம் முழுவதும் நாளை 8 மணி நேரம் மின்தடை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved