MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • சென்னை
  • சென்னையில் அதிர்ச்சி! 2 ரயில்களும் ஒரே தண்டவாளத்தில் வந்ததால் பதற்றம்! அலறி கூச்சலிட்ட பயணிகள்!

சென்னையில் அதிர்ச்சி! 2 ரயில்களும் ஒரே தண்டவாளத்தில் வந்ததால் பதற்றம்! அலறி கூச்சலிட்ட பயணிகள்!

சென்னை பல்லாவரம் ரயில் நிலையத்தில் ஒரே தண்டவாளத்தில் இரண்டு ரயில்கள் வந்து நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது. 

1 Min read
Author : vinoth kumar
| Updated : May 21 2025, 11:58 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
மின்சார ரயில்கள்
Image Credit : our own

மின்சார ரயில்கள்

தலைநகர் சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும் மின்சார ரயில்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. அதுமட்டுமல்லாமல் எந்தவொரு டிராபிக்கிலும் சிக்காமல் குறிப்பிட்ட நேரத்திற்குள் அலுவலகங்களுக்கு செல்ல உதவியாக இருப்பது மின்சார ரயில்கள். குறிப்பாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், வியாபாரிகள் என லட்சகக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர். சென்னை புறநகர் பகுதியை இணைப்பதில் மின்சார ரயில் சேவை முக்கிய பங்கு வகிக்கிறது.

23
ஒரே தண்டவாளத்தில் இரண்டு ரயில்கள்
Image Credit : our own

ஒரே தண்டவாளத்தில் இரண்டு ரயில்கள்

இந்நிலையில் சென்னை அருகே பல்லாவரம் ரயில் நிலையத்தில் ஒரே தண்டவாளத்தில் ஒரே நேரத்தில் இரண்டு ரயில்கள் வந்து நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது மட்டுமல்லாமல் பயணிகள் பதற்றம் அடைந்தனர். அதாவது தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி சென்ற புறநகர் ரயிலின் 6வது பெட்டியில் திடீரென புகை வந்ததால் பல்லாவரம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. பின்னர் தொழில் நுட்ப கோளாறு காரணமாக ரயிலில் இருந்து புகை வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்காக காரணம் என்ன என்பது குறித்து ரயில்வே துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Related image1
சென்னை கத்திப்பாரா மேம்பாலத்தில் கார் விபத்து! வலியால் அலறி துடித்த பெண் ஐடி ஊழியர்கள்!
Related image2
இனி இந்த 5 ரூல்ஸை மீறினால் அவ்வளவு தான்.! வாகன ஓட்டிகளுக்கு செக் வைத்த போலீஸ்
33
ரயில்கள் அனைத்தும் நிறுத்தம்
Image Credit : Google

ரயில்கள் அனைத்தும் நிறுத்தம்

இதனை தொடர்ந்து பின்னால் வந்த புறநகர் ரயிலும் அதே தண்டவாளத்தில் வந்தது பார்த்து பயணிகள் அலறி கூச்சலிட்டதை அடுத்து ரயில் நிறுத்தப்பட்டு பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதனையடுத்து அந்த வழித்தடத்தில் சென்ற ரயில்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. இதனால் வேலைக்கு செல்வோர் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். பின்னர் தொழில் நுட்ப கோளாறு மீண்டும் சரி செய்யப்பட்டு ரயில் சேவை தொடங்கியது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ரயில்
தென்னக இரயில்வே
சென்னை
விபத்து

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!
Recommended image2
பெண் போலீசிடம் ஆசைவார்த்தை கூறி ஆசை தீர! வேலை முடிந்ததும் வேலையை காட்டிய வாலிபர்! விசாரணையில் அதிர்ச்சி!
Recommended image3
மயிலாப்பூரில் 10 நாட்களுக்குள் அடுத்த அதிர்ச்சி! காப்பத்துங்க.. காப்பாத்துங்க.. அலறிய இளைஞர்! விடாத கும்பல்!
Related Stories
Recommended image1
சென்னை கத்திப்பாரா மேம்பாலத்தில் கார் விபத்து! வலியால் அலறி துடித்த பெண் ஐடி ஊழியர்கள்!
Recommended image2
இனி இந்த 5 ரூல்ஸை மீறினால் அவ்வளவு தான்.! வாகன ஓட்டிகளுக்கு செக் வைத்த போலீஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved