MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • முதல்வர் ஸ்டாலின் போல மன்னிப்பு கேட்பாரா..? ரூ.20 லட்சம் எங்கே..? கையும், காலும் ஓடாத விஜய்..!

முதல்வர் ஸ்டாலின் போல மன்னிப்பு கேட்பாரா..? ரூ.20 லட்சம் எங்கே..? கையும், காலும் ஓடாத விஜய்..!

விஜயும் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடியோ காலில் சென்று, ‘‘இது போல் நடந்ததுக்கு ஒரு வருத்தம் தெரிவித்தால் அது இன்னும்கூட பெரிய விஷயமாக பேசப்படும். இந்த நிமிடம் வரை அவர் இரங்கலை சரியாக சொல்லவில்லை என்பதுதான் பெரும் குற்றச்சாட்டாக இருக்கிறது.

3 Min read
Author : Thiraviya raj
Published : Oct 06 2025, 05:31 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Image Credit : Asianet News

கரூர் துயரம் நடந்து இன்றோடு ஒன்பது நாட்கள் ஆகி விட்டது. இந்த நிமிடம் வரை விஜய் கரூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை பார்க்கவில்லை என்கிற பல குற்றச்சாட்டுகள் சமூக வலைதளத்தில் வந்து கொண்டு இருக்கிறது. ஆனால் இந்த விஷயத்தை முறையாகப் பார்த்தால் அரசு அனுமதி இல்லாமல் அல்லது நீதிமன்றம் அனுமதிக்காமல் அவர் அங்கே செல்ல முடியாது என்பதே யதார்த்தம். ஆனாலும், பாதிக்கப்பட்டவர்களிடம் விஜய் ஒரு வீடியோ காலில் பேசியிருக்கலாமம். அதைக்கூட அவர் செய்யவில்லையே என தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டுகள் ஒரு வகையில் ஏற்றுக்கொள்ளக்கூடியதே.

24
Image Credit : Social Media

ஏனென்றால் இவ்வளவு பெரிய சம்பவம் நடந்திருக்கிறது. அவர் நேராகச் சென்று பார்ப்பதில் ஆயிரம் தடைகள் இருக்கிறது. குறைணந் பட்சம் வீடியோ காலில் ‘‘எப்படி இருக்கீங்க..? நான் உங்களுக்கு உறுதுணையாக இருப்பேன். நீங்க கவலைப்படாதீங்க. இது ஒரு ஆற்ற முடியாத துயரம்’’ என ஆறுதல் சொல்லியிருந்தால் உயிர் பறிபோன நிலையில் கூட அந்த குடும்பத்தை சார்ந்தவர்கள் கொஞ்சம் ஆறுதலாவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால், விஜய் அதை செய்வில்லை என்கிற ஒரு பெரும் குறை பலருக்கும் இருக்கிறது.

ஒரு பக்கம் அந்த கட்சியினுடைய பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இன்னும் சில முக்கிய நிர்வாகிகள் எல்லாருமே களத்தில் இல்லை. எல்லாருமே தலைமறைவாக ஓடி ஒளிந்து கொண்டிருக்கும் போது எல்லாப் பொறுப்புகளையும் அவர்களிடம் கொடுத்துவிட்டு தன் பணியை பார்த்துக் கொண்டு இருந்த விஜய்க்கு இப்போது கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. என்ன செய்வதென்று அவருக்கு தெரியவில்லை. ஆனாலும் 20 மாவட்ட செயலாளர்களை கூப்பிட்டு அவருடைய அலுவலகத்தில் தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

Related Articles

Related image1
விஜயை கைது செய்து ஆட்டம் காட்டப் பார்த்தால் அது நடக்காது..! அடித்துச் சொல்லும் அண்ணாமலை
34
Image Credit : Social Media

விஜய் வருத்தமாகவும், கவலையாகவும் இருப்பதாக கூறப்படுகிறது. கடும் அதிர்ச்சியிலும் இருக்கிறார் என்கிறார்கள். மாவட்டச் செயலாளர்களிடம் ஆலோசனையின்போது, ‘‘அடுத்து என்ன செய்யலாம்? இப்படி ஒரு நெருக்கடியில் நம்மை கொண்டுவந்து வைத்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட ஒரு முட்டு சந்தில் தள்ளிவிட்ட மாதிரி ஒரு சூழ்நிலையை உருவாக்கி விட்டார்கள். இதில் இருந்து வெளியில் வருவதற்கு என்னெல்லாம் வழி இருக்கிறது?’’ என அவர்களிடம் ஆலோசனை செய்து வருகிறாராம் விஜய். பொதுவாக எந்த கட்சித் தலைவர்களும் இரண்டாம் கட்ட தலைவர்களை மதிக்கவே மாட்டார்கள் என்கிற கருத்து உள்ளது.

தவெகவைபொருத்தவரை அந்தக் கட்சியில் இது பெரும் குற்றச்சாட்டாகவே உள்ளது. புஸ்ஸி ஆனந்துக்கு மேல் அங்கு எந்தக் கருத்தும் விஜயிடம் போகாது. புஸ்ஸி ஆனந்துக்கு கொண்டு செல்லப்பட்டு அவர் அதில் ஃபில்டர் செய்து ஆயிரம் கருத்துக்கள் வந்தால் அதில் ஒரு சிலவற்றை விஜயின் பார்வைக்கு கொண்டு செல்வது கூட பெரிய விஷயம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் இந்த 20 பேருடன் அடிக்கடி தொடர்ந்து பேசி வருகிறார் விஜய்.

44
Image Credit : Social Media

அஜித் குமார் அடித்து கொல்லப்பட்ட சம்பவத்தில் அவரது அம்மாவுக்கு முதலமைச்சர் நேராக போன் செய்து எடுத்த உடனே சாரி கேட்டார். அது பயங்கரமாக ட்ரோல் செய்யப்பட்டது. உங்கள் ஆட்சியில் இப்படி ஒரு கொடூரமான கொலையை செய்து விட்டு எப்படி கொஞ்சம்கூட கூச்சமே இல்லாமல் நீங்கள் ‘‘சாரி’’ கேட்கிறீர்கள் என எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தன. ஆனாலும், ஒரு முதலமைச்சர் அவர் நேரடியாகப் பேசி ‘சாரி’ கேட்பது என்பது ஒரு பண்பு. அதை அவர் செய்து விட்டார். அதேபோல் விஜயும் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடியோ காலில் சென்று, ‘‘இது போல் நடந்ததுக்கு ஒரு வருத்தம் தெரிவித்தால் அது இன்னும்கூட ரொம்ப பெரிய விஷயமாக பேசப்படும். இந்த நிமிடம் வரை அவர் இரங்கலை சரியாக சொல்லவில்லை என்பதுதான் பெரும் குற்றச்சாட்டாக இருக்கிறது.

அதே போல பாதிக்கப்பட்டவர்களுக்கு விஜய் ரூ.20 லட்சம் நிவாரணம் அளிப்பதாகக் கூறி இருந்தார். அது இன்னும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை. இதனை விஜயிடம் எடுத்துச் சொன்ன நிர்வாகிகள், ‘‘நாம் அறிவித்த நிவாரணப் பணத்தை விரைவில் கொடுத்து விட வேண்டும். இன்னும் தாமதம் செய்தால் அதுவும் நமக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தி விடும். விரைவில் அந்தப்பணம் அவர்களை போய் சேர்ந்து விட்டால் பெரிய சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து விடலாம’’ எனச் சொல்லி இருக்கிறார்கள்.

விஜயும் அதனை உணர்ந்து கொண்டு இன்னும் ஓரிரு நாட்களில் அந்தப்பணத்தை கொடுப்பதற்கு ஏற்பாடு செய்து விடலாம்’’ எனக் கூறியிருப்பதாக சொல்கிறார்கள்.

About the Author

TR
Thiraviya raj
விஜய் (நடிகர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
இப்படியொரு ப்ளானா..? விஜயின் டபுள் ஸ்டாண்ட் ..! என்.டி.ஏ கூட்டணிக்கு கேட் போடும் ராகுல்..! திமுகவுக்கு திருகுவலி..!
Recommended image2
திருமா தில்லுமுல்லு நாடகம்போடுகிறார்..! பட்டியல் சமூக மக்களுக்காக போராடுவது பாமகதான்..! வழக்கறிஞர் பாலு பளீர்..!
Recommended image3
எல்லாரும் அதிமுககாரன் கிடையாது... கட்சியில் இருப்பேன்டானு சொல்றவன்தான் ரோஷமானவன்..! செங்கோட்டையன் மீது செல்லூர் ராஜூ ஆவேசம்..!
Related Stories
Recommended image1
விஜயை கைது செய்து ஆட்டம் காட்டப் பார்த்தால் அது நடக்காது..! அடித்துச் சொல்லும் அண்ணாமலை
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved