MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • 41 பேரைக் கொன்றது விஜய் தான்..! முரசொலி வெளியிட்ட அதிர்ச்சி செய்தி..!

41 பேரைக் கொன்றது விஜய் தான்..! முரசொலி வெளியிட்ட அதிர்ச்சி செய்தி..!

மீட்­டிங் என்ற பெய­ரால் சூட்­டிங் நடத்தி விட்டு, சினி­மா­வில் ‘சும்மா’ கொல்­வ­தைப் போல, நிஜத்­தில் கொன்று விட்டு, லைட்­டைப் போட்டு ஆப் செய்து விளை­யா­டும் சேட்­டிஸ் மனி­த­னின் விளம்­ப­ரப் பசிக்கு 41 உயிர்­களா?

4 Min read
Author : Thiraviya raj
Published : Oct 15 2025, 11:00 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
விளம்­ப­ரப் பசிக்கு 41 உயிர்­களா?
Image Credit : Google

விளம்­ப­ரப் பசிக்கு 41 உயிர்­களா?

‘‘41 உயிர்­க­ளைக் கொன்ற விஜய் பனை­யூ­ரில் பதுங்­கிக் கொண்டு, ‘நீதி    வெல்­லும்’ என்று டுவிட்­டர் போடு­கி­றார். த.வெ.க. கொல்­லும்! ஆனால் நீதி வெல்­லும்’’ என திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி தலையங்கம் வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அந்த தலையங்கத்தில், ‘‘மீட்­டிங் என்ற பெய­ரால் சூட்­டிங் நடத்தி விட்டு,    சினி­மா­வில் ‘சும்மா’ கொல்­வ­தைப் போல, நிஜத்­தில் கொன்று விட்டு,       லைட்­டைப் போட்டு ஆப் செய்து விளை­யா­டும் சேட்­டிஸ் மனி­த­னின்       விளம்­ப­ரப் பசிக்கு 41 உயிர்­களா?

சொன்ன நேரத்­துக்கு வரத் தெரி­ய­வில்லை. காக்க வைத்து காக்க வைத்து, சோறு தண்­ணீ­ரைத் தரா­மல் உடல் வாதையை ஏற்­றி­விட்டு, மூச்­சுத் திணற வைத்து, செத்து விழு­ப­வர்­க­ளைப் பார்த்த பிற­கும் மேடை­யில் பாட்­டுப் பாடிக் கொண்­டி­ருக்க கொடூ­ர­மான வில்­ல­னா­லும் முடி­யாது. அதை ரசிக்­கும்        ஒரு­வ­ரால்­தான் முடி­யும்.

24
இருட்டு பஸ்­ஸைப் பார்த்து மிரண்ட ரசி­கர்­கள்
Image Credit : SOCIAL MEDIA

இருட்டு பஸ்­ஸைப் பார்த்து மிரண்ட ரசி­கர்­கள்

அவர் கேட்­டதை விட, பெரிய இடத்தை காவல் துறை தந்­தது. அந்த இடத்தை முறை­யா­கப் பயன்­ப­டுத்தி இருக்க வேண்­டும். பொது­வாக, ‘பெரிய இடம் கேட்­டோம், சின்ன இடம் தந்­தார்­கள்’ என்­று­தான் காவல் துறை மீது புகார் சொல்­லப்­ப­டும். ஆனால் விஜய் விஷ­யத்­தில், ‘சின்ன இடம் கேட்­கி­றார்­கள், பெரிய இடம் கொடுத்­துள்­ளோம்’ என்­ப­து­தான் பதி­லாக அமைந்­துள்­ளது.

பொது­வாக கூட்­டம் அதி­க­மாகி விட்­டது என்­றால் சொன்ன நேரத்­துக்கு     முன்­ன­தா­கவே தலை­வர்­கள் வந்­து­வி­டு­வார்­கள். அது­தான் வழக்­கம். ஆனால் விஜய், கூட்­டம் நெரி­ச­லாகி, மூச்சு முட்டி, சாகும் வரை பஸ்­ஸுக்­குள்            காத்­தி­ருக்­கி­றார். கரு­வூ­ருக்கு வந்­த­வர், சாவூர் வரும் வரை ஊருக்கு         வெளி­யில் பதுங்கி இருக்­கி­றார். மூச்சு முட்­டத் தொடங்கி விட்­டது என்­ற­தும் லைட்டை ஆப் செய்து விட்டு, நுழை­கி­றார். இருட்டு பஸ்­ஸைப் பார்த்து    மிரள்­கி­றார்­கள் ரசி­கர்­கள்.

தண்­ணீர் கேட்ட ஒரு­வ­ருக்கு விஜய், தண்­ணீர் பாட்­டிலை தூக்­கிப்                  போடு­கி­றார். கூட்­டத்­தில் எதை­யும் தூக்­கிப் போடக் கூடாது என்­பது         சாதா­ர­ண­மான லாஜிக். ஹீரோ தூக்­கிப் போட்­டால் கூட்­டமே அதைப்       பிடிக்­கும். இது நல்ல ‘ஷாட்’ ஆக இருக்­க­லாம். ஆனால் ‘ஷாக்’ ஆனது மக்­கள் தான். கூட்­டத்­தின் போக்­குக்கு ஏற்ப மக்­கள் விழத் தொடங்­கி­யது அதன்      பிற­கு­தான். மிதி­பட்­டது அதன் பிற­கு­தான். இது எதை­யும் கண்டு               கொள்­ளா­மல், கரூ­ரில் இருந்து தப்­பி­னார் விஜய்.

Related Articles

Related image1
என்ன விஜய் இப்படி பண்ணீட்டீங்களே.. தவெகவால் மனநலம் பாதிக்கபட்டவர்போல் பேசும் சீமான் - போட்டு தாக்கும் செல்லூர் நாயகன்
34
தமி­ழக பிரா­டு­கள் கட்சி
Image Credit : Asianet News

தமி­ழக பிரா­டு­கள் கட்சி

சம்­ப­வம் நடந்­தது செப்­டம்­பர் 27. இன்று அக்­டோ­பர் 14. அதா­வது                         பதி­னாறுநாட்­க­ளாக வெளியே வர­வில்லை. அவ­ரது கட்­சி­யின் முக்­கிய                நிர்­வா­கி­கள், முக்­காத நிர்­வா­கி­கள் அனை­வ­ரும் தலை­ம­றைவு ஆனார்­கள். ஆனால் இன்று விஜய் கட்சி நிர்­வாகி என்ன சொல்­கி­றார் என்­றால், ‘போலீஸ் தான் எங்­களை ஊரை விட்­டுப் போகச் சொன்­னார்­கள்’ என்று. மூன்று நாள் கழித்து வீடியோ வெளி­யிட்ட விஜய் இதை ஏன் சொல்­ல­வில்லை.

‘நான் திரும்ப அங்கே போனால் அதைக் கார­ணம் காட்டி பதற்­ற­மான    நிலை­யில் அங்கு வேறு சில அசம்­பா­வி­தங்­கள் எது­வும் நடந்து விடக் கூடாது என்­ப­தற்­கா­கத்­தான் நான் அங்கு மீண்­டும் செல்­ல­வில்லை’ என்று                   வீடி­யோ­வில் சொன்­னது விஜய். ஆனால், ‘போலீஸ் சொன்­ன­தால் வந்­தோம்’ என்று இன்று பொய் சொல்­கி­றது அவ­ரது த.வெ.க. காவல் துறை போகச் சொல்லி இருந்­தால், அதையே பெரிய பிரச்­சினை ஆக்கி இருக்க                    மாட்­டார்­களா?

உயர்­நீ­தி­மன்­றத்­தி­லும் உச்­ச­நீ­தி­மன்­றத்­தி­லும் தாக்­கல் செய்த வழக்­கு­க­ளில் தான் எத்­தனை தில்­லு­முல்­லு­கள். தகி­டு­தத்­தங்­கள். பிரா­டுத்­த­னங்­கள். அந்­தக் கட்­சி­யையே தமி­ழக பிரா­டு­கள் கட்சி என்று சொல்­லும் அள­வுக்கு அத்­தனை பிரா­டு­களை அரங்­கேற்­றினார்­கள்.

41 பேர் இறந்த வழக்கை சி.பி.ஐ. விசா­ரிக்க வேண்­டும் என்று வழக்கு        போடு­கி­றார் பன்­னீர்­செல்­வம் என்­ப­வர். ‘என் மக­னைப் பறி கொடுத்­து               ­விட்­டேன்’ என்று இவர் சொல்­கி­றார். இவர் தனது மகனை பரி­த­விக்க விட்டு விட்­டுப்போய் பல ஆண்­டு­கள்

ஆகி­விட்­டது என்று பன்­னீர்­செல்­வத்­தின் மனைவி சர்­மிளா பேட்டி தரு­கி­றார். ‘அவர் கேஸ் போட்­டதே எனக்­குத் தெரி­யாது. என் பைய­னுக்கு ஒண்ணே கால் வயசு இருக்­கும் போதே விட்­டுட்டு போயிட்­டாரு. பணத்­துக்­காக இவ்­வ­ளவு கேவ­ல­மான வழக்கு போட்­டுள்­ளாரு. பையன் இறந்­த­துக்கு ஐந்து நிமி­சம் தான் இருந்­தாரு. எட்டு வரு­ஷமா அவர் பையனை பார்த்­ததே இல்லை’             என்­கி­றார் சர்­மிளா.

44
பா.ஜ.க. ஸ்கிரிப்ட் என்­று­தானே அர்த்­தம்?
Image Credit : X

பா.ஜ.க. ஸ்கிரிப்ட் என்­று­தானே அர்த்­தம்?

ரூர் சம்­ப­வத்­தில் தனது மனைவி சந்­தி­ராவை இழந்­த­வர் செல்­வ­ராஜ். அவர் பெய­ரில் உச்­ச­நீ­தி­மன்­றத்­தில் ஒரு வழக்கு போடப்­பட்­டுள்­ளது. இந்த தக­வல் வெளி­யா­ன­தும், செல்­வ­ராஜ் அதிர்ச்சி அடைந்­தார். ‘நான் எந்த வழக்­கை­யும் தாக்­கல் செய்­ய­வில்லை’ என்­கி­றார். இந்த செல்­வ­ராஜை அ.தி.மு.க. பிர­மு­கர் ஒரு­வர் ஏமாற்றி கையெ­ழுத்து வாங்கி இருக்­கி­றார். ‘அ.தி.மு.க. ஒன்­றி­யச் செய­லா­ளர், முன்­னாள் ஊராட்சி மன்­றத் தலை­வர் பால­கி­ருஷ்­ணன் என்­ப­வர் மூலம் என்னை ஏமாற்றி போலி­யாக கையெ­ழுத்து பெற்று விட்­டார்­கள். வேலை வாங்­கித் தரு­வ­தா­கச் சொன்­ன­தால்­தான் கையெ­ழுத்து போட்­டேன்’ என்­கி­றார் செல்­வ­ராஜ். இதனை உச்­ச­நீ­தி­மன்­றத்­தி­லேயே சொல்லி                   இருக்­கி­றார் செல்­வ­ராஜ். ‘இது குறித்து நாங்­கள் விசா­ரிப்­போம்’ என்று சொல்லி இருக்­கி­றார்­கள் உச்­ச­நீ­தி­மன்ற நீதி­ப­தி­கள்.

கரூர் மர­ணத்தை சி.பி.ஐ. விசா­ரிக்­கட்­டும் என்று சொல்லி இருக்­கி­றது             உச்­ச­நீ­தி­மன்­றம். “கரூர் துய­ரச்­சம்­ப­வம் தொடர்­பாக உச்­ச­நீ­தி­மன்­றம்           பிறப்­பித்­தி­ருப்­பது இடைக்­கால உத்­த­ர­வு­தான். சி.பி.ஐ. விசா­ரணை கோரி மோச­டி­யாக மனு தாக்­கல் செய்­தி­ருப்­பது உறுதி செய்­யப்­பட்­ட­தும், முந்­தைய உத்­த­ரவு ரத்து செய்­யப்­ப­டும்” என்று மூத்த வழக்­க­றி­ஞர் வில்­சன் சொல்லி இருக்­கி­றார். அதற்­குள் ‘நீதி வெல்­லும்’ என்று அவ­ச­ரப்­ப­டு­கி­றார் விஜய்.

கடந்த ஜூலை மாதம் திருப்­பு­வ­னம் அஜித்­கு­மார் இறந்­தது தொடர்­பாக  நடை­பெற்ற ஆர்ப்­பாட்­டத்­தில் பேசிய விஜய், ‘எதற்­காக சி.பி.ஐ. பின்­னால் ஒளி­கி­றீர்­கள்? சி.பி.ஐ. என்­பது ஆர்.எஸ்.எஸ். – பி.ஜே.பி.யின் கைப்­பாவை’ என்று சொன்­னார். இன்று அவரே கைப்­பா­வை­யின் கைப்­பா­வை­யாக        ஆகி­விட்­டார். அவ­ரது கட்­சியே அவர்­க­ளால் உரு­வாக்­கப்­பட்­ட­து­தானே?

பா.ஜ.க.வை ‘பாசி­சம்’ என்­றும், ‘நரேந்­திர தாமோ­தர் தாஸ் மோடி அவர்­களே’ என்று விஜய் சொல்லி அழைத்த பிற­கும் பா.ஜ.க.வுக்கு கோபம் வர­வில்லை என்­றால் அந்த ஸ்கிரிப்ட், ‘பா.ஜ.க. ஸ்கிரிப்ட்’ என்­று­தானே அர்த்­தம்?’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

TR
Thiraviya raj
விஜய் (நடிகர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
விஜய் கூட்டணி..! ஒன்றிணைந்த அதிமுக..! மிஸ்ஸானால் அதோகதி..! இருதலைக் கொள்ளியாய் இபிஎஸ்..!
Recommended image2
ராஷ்ட்ரபதிபவன் விருந்தில் லெக் பீஸ் எங்கே.! கேள்வி எழுப்பிய காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம்.!
Recommended image3
விஜய் கொடுத்த அசைன்மெண்ட்..! செங்கோட்டையனின் வருகைக்கு பின் அடியோடு மாறிய தவெக..!
Related Stories
Recommended image1
என்ன விஜய் இப்படி பண்ணீட்டீங்களே.. தவெகவால் மனநலம் பாதிக்கபட்டவர்போல் பேசும் சீமான் - போட்டு தாக்கும் செல்லூர் நாயகன்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved