MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்பு விழாவில் திடீரென தோன்றிய ஜக்தீப் தன்கர்.. வாயடைத்துப்போன எதிர்கட்சிகள்..!

சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்பு விழாவில் திடீரென தோன்றிய ஜக்தீப் தன்கர்.. வாயடைத்துப்போன எதிர்கட்சிகள்..!

அப்போது முதல் தன்கர் பொதுவெளியில் காணப்படவில்லை. இதனை எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பி வந்தன. இந்நிலையில் தன்கர் சிபிஆரின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டது எதிர்கட்சிகளின் விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

2 Min read
Author : Thiraviya raj
| Updated : Sep 12 2025, 11:03 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Image Credit : Asianet News

இந்தியாவின் 15வது துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்றார். இந்த நிகழ்ச்சியில் பல தலைவர்களுடன் முன்னாள் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கரும் ராஜினாமா செய்த பிறகு முதல் முறையாக கலந்து கொண்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

இந்திய துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்றார். ஜனாதிபதி பவனில் நடந்த பதவியேற்பு நிகழ்ச்சியில், ஜனாதிபதி திரௌபதி முர்மு, சிபி ராதாகிருஷ்ணனுக்கு துணை ஜனாதிபதி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அப்போது, ​​முன்னாள் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கரும் அவரது மனைவியும் கலந்து கொண்டனர். ராதாகிருஷ்ணன் பதவியேற்ற பிறகு, தன்கர் தொடர்ந்து கைதட்டி அவரை வரவேற்றார். முன்னாள் துணை ஜனாதிபதி முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, முன்னாள் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி ஆகியோருடன் நிகழ்ச்சியில் அமர்ந்திருந்தார். தங்கரின் மனைவி அவரது இடது பக்கத்தில் அமர்ந்திருந்தார்.

24
Image Credit : Asianet News

முன்னாள் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், ராஜினாமா செய்த பிறகு முதல் முறையாக இந்த பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டது எதிர்கட்சிகளின் விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்ததில் இருந்து ஜக்தீப் தன்கர் எந்த பொது நிகழ்சிகளிலும் காணப்படவில்லை. மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உட்பட பல எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் ' தன்கர் காணாமல் போனது' குறித்து தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வந்தனர்.

ஜக்தீப் தன்கர் 2025 ஜூலை 21-ம் தேதி தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த ராஜினாமா உடல்நலக் காரணங்களால் என அதிகாரப்பூர்வமாகக் கூறப்பட்டாலும், எதிர்க்கட்சிகள், ஊடகங்கள் இதில் பாஜக தலையீடு இருப்பதாகக் குற்றம்சாட்டி வந்தன.

Related Articles

Related image1
கல்யாண வீட்டில் கலாட்டா... அறிவுக்கரசிக்கு ஆதி குணசேகரன் கொடுத்த வார்னிங் - எதிர்நீச்சல் தொடர்கிறது
34
Image Credit : Getty

2022 ஜூலை முதல் துணை ஜனாதிபதியாகவும், ராஜ்ய சபா தலைவராகவும் இருந்தார். பாஜக ஆதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது பதவிக்காலம் 2027 வரை இருந்தது. தன்கர், ராஜ்ய சபாவில் எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், திமுக எம்பிக்களுடன் அடிக்கடி மோதல்களில் ஈடுபட்டார். அவர் நீதித்துறை மீதான கருத்துகளால் சர்ச்சைகளில் சிக்கினார்.

ஜூலை 2025-ல், நீதிபதி வர்மாவின் வீட்டில் நடைபெற்ற சோதனையில் மிகப்பெரிய அளவில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது அதிர்வலைகளை ஏற்படுத்தியது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.,கள், நீதிபதி வர்மாவை நீக்கக் கோரி ராஜ்ய சபாவில் தீர்மானத்தை சமர்ப்பித்தனர். தன்கர் இந்த தீர்மானத்தை ஏற்று, விசாரணைக்கு அனுமதித்தார். ஆனால் அவர் மத்திய அரசுக்கு இதை முன்கூட்டியே தெரிவிக்கவில்லை.

அரசு தனியாக ராஜ்யசபாவில் தனியாக இதே போன்ற தீர்மானத்தை தயார் செய்து கொண்டிருந்தது. தன்கரின் தன்னிச்சையான முடிவு அரசின் திட்டத்தை சீர்குலைத்ததாகக் கருதப்பட்டது. இதனால், அரசு தன்கருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதாக அறிவித்தது.

44
Image Credit : social media

ஜூலை 21 அன்று மாலை, தன்கர் தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி திருப்பதி முர்முவிடம் சமர்ப்பித்தார். அடுத்த நாள் அது ஏற்றுக்கொள்ளப்பட்டது. அப்போது முதல் தன்கர் பொதுவெளியில் காணப்படவில்லை. இதனை எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பி வந்தன. இந்நிலையில் தன்கர் சிபிஆரின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டது எதிர்கட்சிகளின் விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

About the Author

TR
Thiraviya raj
சிபி ராதாகிருஷணன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
அதிமுக கூட்டணியில் மீண்டும் தேமுதிக.?! சிவராத்திரி பூஜையில் முடிந்தது பேச்சுவார்த்தை.! அண்ணியாருக்கு துணை முதலமைச்சர் பதவியாம்!
Recommended image2
வாய்தவறி வந்த வார்த்தை... த்ரிஷாவிற்காக நயினார் வருத்தம்... அண்ணாமலை விட்ட டோஸ்..!
Recommended image3
வங்கதேசத்தின் புதிய அமைச்சரவையில் இந்து அமைச்சர்..! யார் இந்த கயேஷ்வர் சந்திர ராய்..?
Related Stories
Recommended image1
கல்யாண வீட்டில் கலாட்டா... அறிவுக்கரசிக்கு ஆதி குணசேகரன் கொடுத்த வார்னிங் - எதிர்நீச்சல் தொடர்கிறது
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved