MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • இன்ஸ்டா ரீல் போட்டு மாட்டிக்கிட்ட புருஷன்! அடுத்து மனைவி செய்த சம்பவம்...!

இன்ஸ்டா ரீல் போட்டு மாட்டிக்கிட்ட புருஷன்! அடுத்து மனைவி செய்த சம்பவம்...!

எட்டு வருடங்களாகக் காணாமல் போன கணவர், இன்ஸ்டாகிராம் ரீல் மூலம் மனைவியால் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். இரண்டாவது திருமணம் செய்துகொண்டதால் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

1 Min read
Author : SG Balan
Published : Sep 02 2025, 03:20 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
இன்ஸ்டாவில் கணவரைக் கண்டுபிடித்த பெண்
Image Credit : google

இன்ஸ்டாவில் கணவரைக் கண்டுபிடித்த பெண்

உத்தரப் பிரதேச மாநிலம், ஹர்தோய் மாவட்டத்தில் எட்டு வருடங்களாகக் காணாமல் போனதாகக் கருதப்பட்ட ஒருவர், இன்ஸ்டாகிராம் ரீல் மூலம் தனது முதல் மனைவியால் கண்டறியப்பட்டு, கைது செய்யப்பட்டார். மனைவியை கைவிட்டுவிட்டு, வேறு திருமணம் செய்துகொண்டதால் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஹர்தோய் மாவட்டம், சந்திலா பகுதியைச் சேர்ந்த ஷீலு (Sheelu) என்பவரின் கணவர் ஜிதேந்திரா என்கிற பப்லு (Jitendra alias Bablu) 2018-ம் ஆண்டு, ஷீலு கர்ப்பமாக இருந்தபோது அவரை விட்டுவிட்டுச் சென்றுவிட்டார். பின்னர், அவர் பஞ்சாபில் உள்ள லூதியானாவில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்துள்ளார்.

23
ஷீலுவின் இன்ஸ்டாகிராம் ரீல்
Image Credit : X

ஷீலுவின் இன்ஸ்டாகிராம் ரீல்

சமீபத்தில், ஷீலு தனது இன்ஸ்டாகிராமில் ஒரு ரீல் வீடியோவைப் பார்த்தபோது, அதில் தனது கணவர் ஜிதேந்திரா இருப்பதைக் கண்டார். உடனடியாக அவர் காவல்துறைக்குத் தகவல் அளித்தார். காவல்துறையினர் நடத்திய விசாரணையில், வீடியோவில் இருப்பது ஜிதேந்திரா தான் என்றும், அவர் லூதியானாவில் இருப்பதாகவும் உறுதி செய்யப்பட்டது.

ஜிதேந்திராவின் தந்தை, 2018-ம் ஆண்டு ஜிதேந்திராவைக் காணவில்லை என்று புகார் அளித்திருந்தார். அப்போது, ஷீலுவின் உறவினர்கள் மீது சந்தேகம் இருப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

Related Articles

Related image1
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா..! உயிர் தோழியை தன் கணவனுக்கே கட்டி வைத்த மனைவி
Related image2
காதலனுடன் 15 நாள், கணவனுடன் 15 நாள்... பெண்ணின் விநோந கோரிக்கை... ஓகே சொல்லி அனுப்பி வைத்த கணவன்!
33
ஜிதேந்திரா கைது
Image Credit : X

ஜிதேந்திரா கைது

துணை ஆய்வாளர் ரஜினிகாந்த் பாண்டே தலைமையிலான காவல்துறைக் குழுவினர் லூதியானா சென்று ஜிதேந்திராவைக் கைது செய்தனர். ஷீலு அளித்த புகாரின் அடிப்படையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

"கைது செய்யப்பட்ட ஜிதேந்திராவிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என்று வட்டார அதிகாரி சந்தோஷ் குமார் சிங் தெரிவித்துள்ளார்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
கணவன்
மனைவி
இந்தியா
இன்ஸ்டாகிராம்
உறவு ஆலோசனைகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தவித்த கர்ப்பிணி பெண்.! கதறிய சிறுமி.! கொதித்தெழுந்த உறவினர்கள்...! டெல்லி ஏர்போர்ட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
Recommended image2
ராஷ்ட்ரபதிபவன் விருந்தில் லெக் பீஸ் எங்கே.! கேள்வி எழுப்பிய காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம்.!
Recommended image3
தனியாக இருந்த மாணவியை மிரட்டி ஆபாச வீடியோ பதிவு.. மக்கள் போராட்டத்தால் ம.பி.யில் பதற்றம்!
Related Stories
Recommended image1
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா..! உயிர் தோழியை தன் கணவனுக்கே கட்டி வைத்த மனைவி
Recommended image2
காதலனுடன் 15 நாள், கணவனுடன் 15 நாள்... பெண்ணின் விநோந கோரிக்கை... ஓகே சொல்லி அனுப்பி வைத்த கணவன்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved