MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • ஷாக்கிங் நியூஸ்! விஜய் பரப்புரை கூட்டத்துக்கு கைத்துப்பாக்கியுடன் வந்த நபரால் பரபரப்பு! போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி!

ஷாக்கிங் நியூஸ்! விஜய் பரப்புரை கூட்டத்துக்கு கைத்துப்பாக்கியுடன் வந்த நபரால் பரபரப்பு! போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி!

TVK Vijay Meeting: கரூர் சம்பவத்திற்குப் பிறகு புதுச்சேரியில் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்ற விஜய் பொதுக்கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கூட்டத்திற்கு கைத்துப்பாக்கியுடன் வந்த நபர் மெட்டல் டிடெக்டர் சோதனையில் பிடிபட்டார். 

1 Min read
Author : vinoth kumar
Published : Dec 09 2025, 09:26 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
தவெக தலைவர் விஜய்
Image Credit : Asianet News

தவெக தலைவர் விஜய்

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசாரத்தை அக்கட்சியின் தலைவர் விஜய் தொடங்கினார்.இதனையடுத்து அரியலூர், நாகை, திருவாரூரில் ரோடு ஷோக்கள் மூலம் மக்களை சந்தித்தார். இந்நிலையில் கரூரில் செப்டம்பர் 27-ம் தேதி விஜய் நடத்திய ரோடு ஷோ-வில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.

24
தனியார் கல்லூரியில் நடைபெற்ற விஜய் சந்திப்பு
Image Credit : tvk

தனியார் கல்லூரியில் நடைபெற்ற விஜய் சந்திப்பு

இந்த சம்பவத்தை அடுத்து திட்டமிட்ட அனைத்து பிரசாரமும் ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து ரோடு ஷோக்களை விஜய்க்கு நடத்தவில்லை. அரசும் அனுமதி கொடுக்கவில்லை. அண்மையில் காஞ்சிபுரம் மாவட்ட மக்களை தனியார் கல்லூரியின் உள் அரங்கில் விஜய் சந்தித்து பேசினார்.

Related Articles

Related image1
விஜய் எண்ட்ரி.. மாநிலத்தின் மொத்த போலீஸ் படையையும் களம் இறக்கிய ரங்கசாமி..
Related image2
வாட்டி வதைக்கும் கடும் குளிர்.. மழை அவ்வளவு தானா? டெல்டா வெதர்மேன் சொல்வது என்ன?
34
புதுச்சேரி ரோடு ஷோவுக்கு அனுமதி மறுப்பு
Image Credit : X

புதுச்சேரி ரோடு ஷோவுக்கு அனுமதி மறுப்பு

இதனையடுத்து புதுச்சேரி ரோடு ஷோவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் பொதுக்கூட்டத்திற்கு பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது. அதாவது புதுச்சேரி பொதுக் கூட்டத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தவெகவினர் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க கூடாது. இக்கூட்டத்தில் 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தவெக வழங்கிய கியூ ஆர் கோட் அடங்கிய பாஸ் இருந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது.

44
துப்பாக்கியுடன் வந்த நபரால் பரபரப்பு
Image Credit : Asianet News

துப்பாக்கியுடன் வந்த நபரால் பரபரப்பு

கரூர் சம்பவத்தை போன்று எந்த அசம்பாவிதமும் நடந்துவிடக் கூடாது என்பதற்காக புதுச்சேரி உப்பளம் எக்ஸ்போ மைதானத்தில் அதிகளவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் புதுச்சேரியில் நடைபெறும் விஜய் பரப்புரை கூட்டத்திற்கு கைத்துப்பாக்கியுடன் வந்த நபரால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தொண்டர்களை கூட்ட அரங்கில் அனுமதித்த போது மெட்டல் டிடெக்டரால் மூலம் அவர் பிடிப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட அவரிடம் விசாரணை நடத்தியதில் தவெக சிவகங்கை மாவட்டச் செயலாளரின் தனிப் பாதுகாவலர் டேவிட் என்பவது தெரியவந்துள்ளது. தொடர்ந்து அவரிடம் துப்பாக்கி வைத்திருக்க டேவிட் உரிமம் பெற்றிருந்தாரா? என்பது தொடர்பாக புதுச்சேரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
டிவி.கே. விஜய்
tvk நெரிசல்
அரசியல்
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Recommended image1
வங்கக்கடலில் புயல்? தமிழகத்தில் ஓயாமல் ஊத்தப்போகும் மழை.. வானிலை கொடுத்த சூப்பர் அப்டேட்!
Recommended image2
அடேங்கப்பா.! சென்னை மத்திய கைலாஷ் L வடிவ மேம்பாலம்! இவ்வளவு சிறப்பு அம்சங்கள் இருக்கா.!
Recommended image3
நயினார் எந்த பெண்ணின் மனம் புண்படும் வகையில் பேசினாரோ.. அந்த பெண்ணிடம்.. எம்.பி.சுதா சரவெடி!
Related Stories
Recommended image1
விஜய் எண்ட்ரி.. மாநிலத்தின் மொத்த போலீஸ் படையையும் களம் இறக்கிய ரங்கசாமி..
Recommended image2
வாட்டி வதைக்கும் கடும் குளிர்.. மழை அவ்வளவு தானா? டெல்டா வெதர்மேன் சொல்வது என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved