MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து! காப்பாத்துங்க! காப்பாத்துங்க! அலறிய படி உயிரிழந்த 17 பேர்!

அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து! காப்பாத்துங்க! காப்பாத்துங்க! அலறிய படி உயிரிழந்த 17 பேர்!

ஹைதராபாத்தில் உள்ள குல்சார் ஹவுஸ் அருகே மூன்று மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

1 Min read
Author : vinoth kumar
Published : May 18 2025, 12:09 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Image Credit : Hyderabad

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பிரபலமான சார்மினார் அருகே உள்ள குல்சார் ஹவுஸ் அருகே இன்று அதிகாலை மூன்று மாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் தீ மளமளவென அனைத்து இடங்களில் பரவியதை அடுத்து அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

24
Image Credit : Hyderabad

இந்த தீ விபத்து தொடர்பாக அப்பகுதியினர் உடனே தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு 11 தீயணைப்பு வாகனங்கள் விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர். பல மணிநேரம் போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

Related Articles

Related image1
லக்னோவில் ஹோட்டலில் பயங்கர தீ விபத்து: 30 பேர் மீட்பு!
Related image2
தாலி கட்டிய 20 நிமிடத்தில் மாரடைப்பு வந்து உயிரிழந்த மணமகன்.. கண்கலங்கிய குடும்பத்தினர்
34
Image Credit : Hyderabad

இந்த தீ விபத்தில் 17 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 30க்கும் மேற்பட்டோர் காயங்கள் மற்றும் மயக்க நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. மேலும் கட்டிடத்தில் சிக்கி உள்ள சிலரை மீட்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

44
Image Credit : our own

தீ விபத்துக்கான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை, ஆனால் மின் கசிவு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி தீ விபத்தில் உயிரிாந்தவர்களுக்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்ததுடன், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி ஏற்பாடு செய்ய பிரதமருடன் பேசுவதாகக் கூறினார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
விபத்து
தீ விபத்து

Latest Videos
Recommended Stories
Recommended image1
வாகன ஓட்டிகளுக்கு ஜாக்பாட்! நாளை முதல் சுங்க கட்டணம் அதிரடி குறைப்பு.. எந்தெந்த சாலைகள் தெரியுமா..?
Recommended image2
இந்தியா ஒரு மத நாடாக மாறும்... இஸ்லாமியர்களுக்கு விசுவாச சான்றிதழ் தேவையில்லை.. ஓவைசி சரவெடி..!
Recommended image3
ஏர் இந்தியா விமான விபத்து திட்டமிட்ட சதி? வேண்டுமென்றே விபத்தை ஏற்படுத்திய விமானி? அதிர்ச்சி தகவல்!
Related Stories
Recommended image1
லக்னோவில் ஹோட்டலில் பயங்கர தீ விபத்து: 30 பேர் மீட்பு!
Recommended image2
தாலி கட்டிய 20 நிமிடத்தில் மாரடைப்பு வந்து உயிரிழந்த மணமகன்.. கண்கலங்கிய குடும்பத்தினர்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved