MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • ஏமனில் இந்திய நர்ஸ் நிமிஷா பிரியா விடுதலையா? இந்தியா கொடுத்த விளக்கம்!

ஏமனில் இந்திய நர்ஸ் நிமிஷா பிரியா விடுதலையா? இந்தியா கொடுத்த விளக்கம்!

ஏமன் நாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நர்ஸ் நிமிஷா ப்ரியாவின் விடுதலை குறித்த தகவல்களை இந்திய அரசு மறுத்துள்ளது. விடுதலைக்கான முயற்சிகள் தொடர்வதாகவும், ஆனால் உறுதியான தகவல் எதுவும் இல்லை என்றும் வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

2 Min read
Author : SG Balan
| Updated : Jul 23 2025, 03:31 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
நிமிஷா ப்ரியாவின் தண்டனை ரத்து?
Image Credit : Asianet News

நிமிஷா ப்ரியாவின் தண்டனை ரத்து?

ஏமன் நாட்டில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள கேரளாவைச் சேர்ந்த நர்ஸ் நிமிஷா ப்ரியாவின் தண்டனை ரத்து செய்யப்பட்டு அவர் விடுவிக்கப்பட உள்ளதாக வெளியான தகவல்களை இந்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது தொடர்பாக வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், நிமிஷாவை விடுவிக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், ஆனால் அவரது விடுதலை குறித்த எந்த தகவலும் இல்லை என்றும் தெளிவுபடுத்தினார்.

26
நிமிஷா பிரியா விடுதலை - உண்மை அல்ல
Image Credit : social media

நிமிஷா பிரியா விடுதலை - உண்மை அல்ல

ஏமன் தலைநகர் சனாவில் இருந்து வீடியோ மூலம் பேசிய மதபோதகர் மற்றும் குளோபல் பீஸ் இனிஷியேட்டிவ் நிறுவனர் டாக்டர் கே.ஏ.பால், ஏமன் மற்றும் இந்தியத் தலைவர்களின் அயராத முயற்சிகளுக்குப் பிறகு நிமிஷாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டதாக செவ்வாய்க்கிழமை இரவு (உள்ளூர் நேரம்) தெரிவித்திருந்தார். ஆனால், நிமிஷாவை விடுவிக்க ஏமனில் பணியாற்றி வரும் சாமுவேல் ஜெரோம் இந்த தகவல் உண்மை இல்லை என்று கூறியுள்ளார்.

டாக்டர் கே.ஏ.பால் தனது வீடியோ செய்தியில், நிமிஷாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டதற்கும், விரைவில் அவர் விடுவிக்கப்பட்டு இந்தியாவுக்கு அழைத்து வரப்படுவதற்கும் துணை நின்ற ஏமன் தலைவர்களுக்கும், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய தூதரக அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்திருந்தார். மேலும், நிமிஷாவை சனா சிறையில் இருந்து ஓமன், ஜெட்டா, எகிப்து, ஈரான் அல்லது துருக்கி வழியாக பாதுகாப்பாக இந்தியாவுக்கு அழைத்து வர இந்திய அரசுடன் இணைந்து ஏற்பாடுகளைச் செய்ய முடியும் என்றும் அவர் கூறியிருந்தார்.

Related Articles

Related image1
நிமிஷா பிரியா வழக்கு: 2017 முதல் 2025 வரை நடந்தது என்ன? முழு டைம் லைன்
Related image2
மரணக் கயிற்றில் இருந்து மீண்ட இந்தியர்கள்: 'இரத்தப் பணம்' நிமிஷா பிரியாவைக் காப்பாற்றுமா?
36
வெளியுறவுத் துறை நடவடிக்கைகள்
Image Credit : Google

வெளியுறவுத் துறை நடவடிக்கைகள்

இதற்கிடையில், கடந்த வாரம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், வெளியுறவுத் துறை அமைச்சகம் நிமிஷா ப்ரியா விவகாரத்தில் இந்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து தெரிவித்திருந்தது. வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், நிமிஷா ப்ரியாவின் குடும்பத்திற்கு உதவவும், ஷரியத் சட்டத்தின் கீழ் மன்னிப்பு அல்லது கருணை கோருவது உட்பட சிக்கலான சட்ட நடைமுறைகளை மேற்கொள்ளவும் ஒரு வழக்கறிஞரை நியமித்துள்ளதாகத் தெரிவித்தார்.

46
இந்திய அரசின் உதவிகள்
Image Credit : our own

இந்திய அரசின் உதவிகள்

"இது மிகவும் முக்கியமான ஒரு விஷயம். இந்த வழக்கில் இந்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. நாங்கள் சட்ட உதவியை வழங்கியுள்ளோம், மேலும் குடும்பத்தினருக்கு உதவ ஒரு வழக்கறிஞரையும் நியமித்துள்ளோம். அவரது குடும்பத்தினர் அவரைத் தொடர்ந்து சந்திப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்துள்ளோம். மேலும் இந்த சிக்கலைத் தீர்க்க உள்ளூர் அதிகாரிகளுடனும், குடும்ப உறுப்பினர்களுடனும் தொடர்பில் இருக்கிறோம். ஜூலை 16-ஆம் தேதி நடைபெறவிருந்த அவரது மரண தண்டனையை ஒத்திவைக்க, ஏமன் உள்ளூர் அதிகாரிகள் சம்மதித்தனர்" என்று ஜெய்ஸ்வால் கூறினார்.

56
தியா வழங்கத் தயார்
Image Credit : social media

தியா வழங்கத் தயார்

முன்னதாக, ஜூலை 16-ஆம் தேதி நிமிஷாவின் மரண தண்டனை ஒத்திவைக்கப்பட்டதாக, கிராண்ட் முப்தி ஷேக் அபூபக்கர் அகமது காந்தபுரம் தெரிவித்திருந்தார். அவர் ஏமனில் உள்ள அறிஞர்களுடன் பேசி, நிமிஷாவை விடுவிக்க கோரிக்கை விடுத்ததாகக் கூறினார். இஸ்லாமிய சட்டப்படி, கொலைக்கு பதிலாக "தியா" (நஷ்டஈடு) கொடுத்து மன்னிப்பு கேட்கும் வழக்கம் உள்ளதாகவும், நிமிஷாவின் குடும்பத்தினர் நஷ்டஈடு கொடுக்க தயாராக இருப்பதாகவும், அதை ஏற்றுக்கொள்ளுமாறு தான் கோரிக்கை விடுத்ததாகவும் கிராண்ட் முப்தி தெரிவித்திருந்தார். இந்த விவகாரத்தில் மதத்தையும் தாண்டி மனிதாபிமான அடிப்படையில்தான் தான் கோரிக்கை விடுத்ததாக அவர் கூறியிருந்தார்.

66
2017-ஆம் ஆண்டில் நடந்த சம்பவம்
Image Credit : x/myvakil

2017-ஆம் ஆண்டில் நடந்த சம்பவம்

கேரள முதலமைச்சர் பினராயி விஜயனும், நிமிஷாவின் மரண தண்டனை ஒத்திவைக்கப்பட்டதற்கு ஆறுதல் மற்றும் நம்பிக்கை தெரிவித்திருந்தார். மேலும், காந்தபுரம் ஏ.பி.அப்துபக்கர் முஸ்லியார் உள்ளிட்ட பலரும் நிமிஷாவிற்காக அயராது உழைத்து வருவதையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

2017-ஆம் ஆண்டில், ஏமன் நாட்டவர் ஒருவர் நிமிஷாவின் கட்டுப்பாட்டில் இருந்த வீட்டில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் நிமிஷா ப்ரியாவுக்கு மரண தண்டனை விதித்து ஏமன் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பை அந்நாட்டின் உச்ச நீதிமன்றமும் நவம்பர் 2023-ல் உறுதி செய்தது குறிப்பிடத்தக்கது.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
இந்தியா
உலகம்
உண்மை சரிபார்ப்பு

Latest Videos
Recommended Stories
Recommended image1
மதக் கூட்டங்களில் பெண் ஜிஹாதிகள்..! இந்தியாவிற்கு எதிராக படுபயங்கர சதித்திட்டம்..! எல்லையில் தீவிர பாதுகாப்பு..!
Recommended image2
IndiGo பயணிகளுக்கு ஷாக் கொடுத்த CEO.. இன்னும் 10 நாளைக்கு இது தான் கண்டிஷன்..!
Recommended image3
Bus fares: விமானத்தில் மட்டுல்ல இனி பேருந்திலும் போக முடியாது போல.! பிளைட் டிக்கெட் ரேட்டிற்கு உயர்ந்த பேருந்து கட்டணம்.!
Related Stories
Recommended image1
நிமிஷா பிரியா வழக்கு: 2017 முதல் 2025 வரை நடந்தது என்ன? முழு டைம் லைன்
Recommended image2
மரணக் கயிற்றில் இருந்து மீண்ட இந்தியர்கள்: 'இரத்தப் பணம்' நிமிஷா பிரியாவைக் காப்பாற்றுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved