Summer Eye Care: கோடையில் ஏற்படும் கண் பிரச்சினைகள்.! கிச்சன்ல இருக்கு கூலான தீர்வு!
கோடை வெயிலும், சூரியனோட வெளிச்சமும் நம்ம கண்களுக்கு பெரிய பிரச்சனையா இருக்கு. இதனால கண்கள் ரொம்பவே சோர்ந்து போயிடுது. அதை ரொம்ப ஈசியா சரி செய்யலாம் தெரியுமா?

கண்கள் இரண்டால்.! கண்கள் இரண்டால்.!
குளிர்ந்த நீர்
முதல்ல செய்ய வேண்டியது இதுதான். நாள் முழுக்க அடிக்கடி குளிர்ந்த நீரால உங்க கண்களைக் கழுவுங்க. இது கண்களுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும். இல்லைனா, ஐஸ் வாட்டர்ல நனைச்ச காட்டன் பேட்களை (cotton pads) கண்கள் மேல ஒரு பத்து நிமிஷம் வெச்சா போதும். இது ரத்த நாளங்களை சுருங்கச் செஞ்சு, கண்களை ரிலாக்ஸ் ஆக்கும்.
வெள்ளரிக்காய்
கண் பராமரிப்புன்னு சொன்னாலே நமக்கு ஞாபகம் வர்றது வெள்ளரிக்காய்தான். இதுல நீர்ச்சத்து அதிகம். ஃபிரிட்ஜ்ல வெச்ச வெள்ளரிக்காயை எடுத்து, ஒவ்வொரு கண்ணுக்கும் ஒரு ஸ்லைஸ் வெச்சு 15 நிமிஷம் ரிலாக்ஸ் பண்ணுங்க. கண்கள் முழுசா புத்துணர்ச்சி பெறும். வெள்ளரிக்காய் கூழைக்கூட இமைகள் மேல வைக்கலாம். இல்லைனா, வெள்ளரிக்காய் சாறுல கொஞ்சம் எலுமிச்சை சாறு கலந்து, கண்களைச் சுற்றி தடவி, பத்து நிமிஷம் கழிச்சு கழுவலாம். இதுவும் அதே பலனைத் தரும்.
கற்றாழை
கோடைக்கால கண் சோர்வைக் குறைக்க, கற்றாழை ஒரு சிறந்த மருந்து. கற்றாழை சாற்றை சில துளிகள் கண்களில் விட்டால் போதும். இல்லைனா, கற்றாழை சாற்றை ஐஸ் க்யூப்ஸா உறைய வெச்சு, அதை கண் இமைகள் மேல வெச்சா, சோர்வான கண்கள் பிரகாசமா மாறும்.
உருளைக்கிழங்கு
வீங்கிய கண்கள், கருவளையம் பத்தி கவலையா? உருளைக்கிழங்கு இருக்கு. உருளைக்கிழங்கு சாறுக்கு தோலை இறுக்கும் தன்மை (astringent properties) இருக்கு. இது கண் இமைகளின் வீக்கத்தைக் குறைச்சு, கருவளையத்தையும் சரிசெய்யும். ஒரு பச்சை உருளைக்கிழங்கைத் துருவி, அந்த கூழை ஒரு மெல்லிய துணியில கட்டி கண்கள் மேல வைங்க. இல்லைனா, தோல் சீவிய உருளைக்கிழங்கை மெல்லிய ஸ்லைஸா வெட்டி, ஒவ்வொரு கண்ணுலயும் 15 நிமிஷம் வைக்கலாம். இது கருவளையம், கண் வீக்கத்தை சரிசெய்றதோட, சுருக்கங்களையும் குறைக்க உதவும்.
தக்காளி
தக்காளி, சருமத்தின் நிறத்தை மெருகேற்றும்னு நமக்குத் தெரியும். இதை கண்களுக்குக் கீழேயும் பயன்படுத்தலாம். தக்காளி கூழுடன் கொஞ்சம் எலுமிச்சை சாறு, ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் கலந்து கண்களுக்குக் கீழே தடவுங்க. சுமார் 20 நிமிஷம் அப்படியே விட்டுட்டு, அப்புறம் மென்மையா கழுவிடுங்க. இது நல்ல பலன் தரும்.
பன்னீர் (Rose Water)
கண்கள் எரியுதா? உடனே பன்னீரை எடுங்க. ஒவ்வொரு கண்ணுலயும் சில துளிகள் விட்டா, கண்கள் குளிர்ச்சியாகும். பன்னீர்ல நனைச்ச பஞ்சை கண்கள் மேல வெச்சா கருவளையம் நீங்கும். இதுக்கு பதிலா, கண்கள் மேல பன்னீரை ஸ்ப்ரே செய்தும் குளிர்ச்சிப்படுத்தலாம்.
ஸ்ட்ராபெர்ரி
ஸ்ட்ராபெர்ரி துண்டுகளை கண்கள் மேல வெச்சா, அது கண்களுக்கு புத்துயிர் கொடுக்கும். ஸ்ட்ராபெர்ரி துண்டுகள் அல்லது நசுக்கிய புதினா இலைகளை வெச்சு உங்க கண்களைப் புத்துணர்ச்சியாக்கலாம். புதினா சாறுடன் சம அளவு வெள்ளரிக்காய் சாறு கலந்து கண்களுக்குக் கீழே தடவினால் கருவளையம் குறையும்.
டீ பேக்ஸ்
பயன்படுத்திய டீ பேக்குகள், சோர்ந்த கண்களுக்கு ஒரு வரம். டீ போட்ட பிறகு, அந்த டீ பேக்குகளை ஃப்ரீசர்ல கொஞ்ச நேரம் வைங்க. குளிர்ந்த டீ பேக்குகளை கண்கள் மேல 15 நிமிஷம் வெச்சா, கண்கள் பழையபடி பளபளக்கும். இது கருவளையத்தைக் குறைக்கவும் உதவும். இதே மாதிரி கிரீன் டீ பேக்குகளையும் பயன்படுத்தலாம். இல்லைனா, கிரீன் டீ போட்டு, அதை ஆற வெச்சு, அந்த தண்ணீரால் கண்களைக் கழுவலாம். அதுவும் இதே பலனைத் தரும்.

