MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • குற்றம்
  • கதறிய மருமகள் நிகிலா.. விடாத 52 வயது மாமனார்.. ரசித்த மகன் பிரதீப்.. அமமுக பிரமுகர்கள் வெறியாட்டம்

கதறிய மருமகள் நிகிலா.. விடாத 52 வயது மாமனார்.. ரசித்த மகன் பிரதீப்.. அமமுக பிரமுகர்கள் வெறியாட்டம்

தேனியில் குடும்பத் தகராறு காரணமாக மனைவி மற்றும் அவரது அண்ணனை, கணவனும் மாமனாரும் சேர்ந்து சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துள்ளனர். இந்த இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான தந்தை, மகனை தேடி வருகின்றனர்.

2 Min read
Author : vinoth kumar
Published : Dec 12 2025, 12:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Image Credit : Google

தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள முத்தையன்செட்டிபட்டியை சேர்ந்தவர் சிவக்குமார்(52). இவரது மகன் பிரதீப் (27). இருவரும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் ஒன்றிய பொறுப்பில் இருந்து வருகின்றனர். இவருக்கு சின்னமனூரை சேர்ந்த நிகிலா(32) என்பவருடன் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இருவரும் முத்தையன்செட்டிபட்டியில் வசித்து வந்த நிலையில், பிரதீப் அமமுக கட்சியில் கிளைச் செயலாளராக இருந்த நிலையில் எந்த வேலைக்கும் செல்லாமல் குடித்துவிட்டு அடிதடி, கட்டப்பஞ்சாயத்து என்று செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. பிரதீப் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.

25
Image Credit : Asianet News

இதனால் கணவன் மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் நிகிலா தனது கணவரை பிரிந்து தனது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். இதைத் தொடர்ந்து உறவினர்கள் சமாதானம் பேசி கடந்த வாரம் நிகிலாவை பிரதீப்புடன் சேர்த்து வைத்துள்ளனர். இந்நிலையில் இருவருக்கும் இடையே மீண்டும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பிரதீப் நிகிலாவை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த நிகிலா சின்னமனூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் பிரதீப் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்துவதாக போடி தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

Related Articles

Related image1
எங்க வீட்டு பொண்ணையே தூக்கிட்டு போய் கல்யாணம் பண்ணுவியா! மாப்பிள்ளை குடும்பத்தாருக்கு சரமாரி அரிவாள் வெட்டு!
Related image2
சென்னை ECR-ல் அசுர வேகத்தில் வந்த BMW கார்.. டாக்டர் மாணவி உயிரி*ழப்பு.. 3 பேர் கவலைக்கிடம்!
35
Image Credit : Asianet News

இதனை தொடர்ந்து பிரதீப்புடன் சேர்ந்து வாழ முடியாது என பஞ்சாயத்து பேசி முடித்துவிட்டு தன்னுடைய பொருட்களை எடுத்துச் செல்வதற்காக நிகிலா அவரது அண்ணன் விவேக் (33) மற்றும் 10க்கும் மேற்பட்ட உறவினர்களை அழைத்துக் கொண்டு முத்தையன் செட்டிபட்டியில் உள்ள கணவர் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு சிவக்குமார், பிரதீப் மற்றும் நிகிலாவின் குடும்பத்தினருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் பிரதீப் விவேக்கை சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.

45
Image Credit : Asianet News

அண்ணனை கொலை செய்ததை நேரில் கண்டு மயங்கிய நிகிலாவை மாமனார் சிவக்குமார் அரிவாளால் சரமாரியாக வெட்டியும், கத்தியால் குத்தியும் படுகொலை செய்துள்ளனர். இதனை கண்டு அப்பகுதியினர் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இதனைத் தொடர்ந்து சிவக்குமார் மற்றும், அவரது மகன் பிரதீப் ஆகியோர் தலைமறைவாகி விட்டார்கள்.

55
Image Credit : our own

இது தொடர்பாக போடி தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து இரண்டு பேர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலைமறைவாக உள்ள இருவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. குடும்பத் தகராறு காரணமாக மனைவி மற்றும் மைத்துனரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
குற்றம்
தமிழ்நாடு குற்றச் செய்திகள்
கொலை
காவல் நிலையம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஆண்ட்டியின் அழகில் மயங்கிய கொரியர் ஊழியர்.. ரவுடியின் மனைவிக்கு விடாமல் காதல் மெசேஜ்.. இறுதியில் நடந்த அதிர்ச்சி
Recommended image2
நான் உனக்கு போதாதா! என் பொண்ணு கேக்குதா.. ஆத்திரத்தில் 46 வயது ஆன்டி.. அலறிய சூர்ய பிரதாப் சிங்
Recommended image3
சார்.. நான் உங்க ஸ்டூடண்ட்ஸ்.! இப்படியெல்லாம் பண்ணாதீங்க! எவ்வளவு சொல்லியும் கேட்காத ஆசிரியருக்கு செருப்பு மாலை
Related Stories
Recommended image1
எங்க வீட்டு பொண்ணையே தூக்கிட்டு போய் கல்யாணம் பண்ணுவியா! மாப்பிள்ளை குடும்பத்தாருக்கு சரமாரி அரிவாள் வெட்டு!
Recommended image2
சென்னை ECR-ல் அசுர வேகத்தில் வந்த BMW கார்.. டாக்டர் மாணவி உயிரி*ழப்பு.. 3 பேர் கவலைக்கிடம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved