MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • குற்றம்
  • திமுக முக்கிய தலைவர் வீட்டில் கொள்ளையடித்தவர்கள் இவர்கள் தான்! எவ்வளவு சவரன் நகை? வெளியான அதிர்ச்சி தகவல்!

திமுக முக்கிய தலைவர் வீட்டில் கொள்ளையடித்தவர்கள் இவர்கள் தான்! எவ்வளவு சவரன் நகை? வெளியான அதிர்ச்சி தகவல்!

தஞ்சாவூரில் திமுக முன்னாள் எம்.பி ஏ.கே.எஸ்.விஜயன் வீட்டில் 87 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் முடிவில், தர்மபுரியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கைது.

1 Min read
Author : vinoth kumar
Published : Dec 07 2025, 09:52 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Image Credit : Asianet News

திமுக முன்னாள் எம்.பி ஏ.கே.எஸ்.விஜயன். இவர் திமுக விவசாய பிரிவின் மாநில செயலாளராகவும், தமிழக அரசின் டெல்லி பிரதிநிதியாகவும் இருந்து வருகிறார். இவரது வீடு தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள சேகரன் நகர் பகுதியில் ஏ.கே.எஸ்.விஜயனுக்கு சொந்தமாக வீடு ஒன்று உள்ளது. இவர்கள் கடந்த 28ம் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் வெளியூருக்கு சென்று விட்டு மீண்டும் டிசம்பர் 1ம் தேதி வீடு திரும்பியுள்ளனர்.

24
Image Credit : Asianet News

அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு நகைகள், வெள்ளி மற்றும் ரொக்கம் உள்ளிட்ட பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. முதலில் 300 சவரன் கூறப்பட்ட நிலையில் பிறகு 87 சவரன் நகைகள் திருடு போனது தெரியவந்தது.

Related Articles

Related image1
வேலைக்கு போற அவசரத்துல இதை மறந்துடாதீங்க! தமிழகம் முழுவதும் நாளை 8 மணி நேரம் மின்தடை!
Related image2
ராமஜெயம் கொலை வழக்கில் எதிர்பாராத ட்விஸ்ட்! பிளான் போட்ட இடம் இதுதானா? குற்றவாளியை நெருங்கும் வருண் குமார்?
34
Image Credit : Asianet News

இதனையடுத்து ஏ.கே.எஸ்.விஜயன் தரப்பு தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரை அடுத்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். விசாரணையில், தர்மபுரியை சேர்ந்த தாய், மகன்கள், மகள் கொள்ளையில் ஈடுபட்டதும் தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே விடுதியில் அறை எடுத்து தங்கி நோட்டமிட்டு கொள்ளையடித்துள்ளதும் தெரியவந்தது.

44
Image Credit : Asianet News

இதனையடுத்து தனிப்படை போலீசார் தர்மபுரி பதுங்கி இருந்த முகமது யூசுப் மனைவி பாத்திமா ரசூல்(54), மகன்கள் மொய்தீன் (37), சாதிக் பாஷா (33), மகள் ஆயிஷா பர்வீன் (30) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் திருட்டு போன நகைகள், வெள்ளிப் பொருட்களை மீட்டனர். பின்னர் நான்கு பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இதே குடும்பத்தைச் சேர்ந்த தலைமறைவாக உள்ள ஷாஜகான் (26) என்பவரைத் தேடி வருகின்றனர்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
காவல் நிலையம்
திமுக
கொள்ளை
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Recommended image1
பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
Recommended image2
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!
Recommended image3
ஏண்டா.. எங்க ஊருக்கே வந்து பொண்ண இப்படி செய்வீங்களா? வாலிபர்களை சுத்துப்போட்ட கிராம மக்கள்! இறுதியில் நடந்த அதிர்ச்சி
Related Stories
Recommended image1
வேலைக்கு போற அவசரத்துல இதை மறந்துடாதீங்க! தமிழகம் முழுவதும் நாளை 8 மணி நேரம் மின்தடை!
Recommended image2
ராமஜெயம் கொலை வழக்கில் எதிர்பாராத ட்விஸ்ட்! பிளான் போட்ட இடம் இதுதானா? குற்றவாளியை நெருங்கும் வருண் குமார்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved