MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • குற்றம்
  • திருமணமான ஒரு மாதத்தில் கணவருக்கு வந்த அந்த சந்தேகம்.. மனவேதனையில் கதறிய 26 வயது ஐஸ்வர்யா.. இறுதியில் அதிர்ச்சி

திருமணமான ஒரு மாதத்தில் கணவருக்கு வந்த அந்த சந்தேகம்.. மனவேதனையில் கதறிய 26 வயது ஐஸ்வர்யா.. இறுதியில் அதிர்ச்சி

பெங்களூருவில் திருமணமான ஒரு மாதத்தில், கணவனின் நடத்தையில் சந்தேகம் மற்றும் கொடுமை தாங்காமல் புதுப்பெண் ஐஸ்வர்யா தற்கொலை செய்துகொண்டார். பெற்றோர் சமாதானம் செய்தும் பலனில்லாததால், அவர் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். 

1 Min read
Author : vinoth kumar
Published : Dec 26 2025, 02:28 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
பெங்களூரு தம்பதி
Image Credit : Asianet News

பெங்களூரு தம்பதி

கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களா அடுத்துள்ள மல்லசந்திரா பகுதியை சேர்ந்தவர் லிகித் சிம்ஹா (27). இவருக்கும் நாகமங்களாவை சேர்ந்த ஐஸ்வர்யா (26) என்பவருக்கும் கடந்த நவம்பர் மாதம் இறுதியில் இரு வீட்டார் பெற்றோர் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் ஐஸ்வர்யா தனது கணவருடன் மல்லசந்திராவில் வசித்து வந்தார்.

25
நடத்தையில் சந்தேகம்
Image Credit : Google

நடத்தையில் சந்தேகம்

இந்நிலையில் இருவரது வாழ்க்கை சிறப்பாக சென்றுக்கொண்டிருந்த நிலையில் சந்தேகம் என்ற கொடூரன் புகுந்தான். அதாவது லிகித் சிம்ஹா, ஐஸ்வர்யாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு அவ்வப்போது தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும் ஐஸ்வர்யாவை அடித்து, உதைத்து துன்புறுத்தி வந்துள்ளார். நாளுக்கு நாள் இவரது டார்ச்சர் தாங்க முடியாததால் ஐஸ்வர்யா தனது பெற்றோரை தொடர்பு கொண்டு நடந்த சம்பவத்தை தெரிவித்தார். இதனை கேட்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

Related Articles

Related image1
தூக்கத்தில் மலம் கழித்த 3 வயது குழந்தை கொலை.. தாயின் கள்ளக்காதலன் வெறிச்செயல்!
Related image2
ஒரு லட்சம் ரூபாய்க்கு காண்டம் வாங்கிய சென்னை நபர்! மிரளவிட்ட ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் ரிப்போர்ட்!"
35
கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு
Image Credit : iSTOCK

கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு

இந்நிலையில் சம்பவத்தன்று காலையில், ஐஸ்வர்யாவின் பெற்றோர் மல்லசந்திராவுக்கு வந்து லிகித் சிம்ஹாவிடம் அட்வைஸ் செய்து வைத்து இருவரையும் ஒன்று சேர்த்து வைத்தனர். பின்னர் அவர்கள் மாலையில் வீடு திரும்பிய பின்பு மீண்டும் கணவன்-மனைவி இடையே மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த லிகித் சிம்ஹா, ஐஸ்வர்யாவை கொடூரமாக தாக்கியுள்ளார்.

45
புதுப்பெண் ஐஸ்வர்யா தற்கொலை
Image Credit : Getty

புதுப்பெண் ஐஸ்வர்யா தற்கொலை

இதனால் வாழ்க்கையே வெறுத்துப்போன ஐஸ்வர்யா கணவர் வெளியில் சென்றதும் தனது சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். பின்னர் கணவர் வீட்டுக்கு வந்து பார்த்த போது மனைவி தற்கொலை செய்துகொண்டதை பார்த்து அதிர்ச்சியில் அலறி கூச்சலிட்டு அழுது கதறினார். இதுகுறித்து ஐஸ்வர்யாவின் பெற்றோரை செல்போனில் தொடர்பு தெரிவித்ததை அடுத்து போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.

55
கணவர் கைது
Image Credit : ANI

கணவர் கைது

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஐஸ்வர்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தனது மகள் ஐஸ்வர்யாவின் பெற்றோர் மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்தனர். இதனையடுத்து லிகித் சிம்ஹாவை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
திருமணம்
தமிழ்நாடு குற்றச் செய்திகள்
காவல் நிலையம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
சகோதரியை கண்டித்த ஆசிரியர்..! பள்ளியில் துப்பாக்கிச் சூட்டில் 22 குழந்தைகள் பலி..! பணயக் கைதிகளான ஆசிரியர்கள்..!
Recommended image2
'இந்தியாவை எதிர்க்கும் எவருக்கும் இதுதான் நடக்கும்..!' சிறையில் கதறக் கதற கொல்லப்பட்ட பயங்கரவாதி.. கொலையாளிக்கு பெருகும் ஆதரவு..!
Recommended image3
பாகிஸ்தானில் இஸ்லாமியர்களுக்குள் மதத் தீண்டாமை..! ஷியா மசூதிகள் குறிவைக்கப்படுவது ஏன்?
Related Stories
Recommended image1
தூக்கத்தில் மலம் கழித்த 3 வயது குழந்தை கொலை.. தாயின் கள்ளக்காதலன் வெறிச்செயல்!
Recommended image2
ஒரு லட்சம் ரூபாய்க்கு காண்டம் வாங்கிய சென்னை நபர்! மிரளவிட்ட ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் ரிப்போர்ட்!"
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved