MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • குற்றம்
  • அண்ணி மீது அடங்காத ஆத்திரத்தில் கொழுந்தன்! வீடு புகுந்து! கதறியும் விடாமல்! இறுதியில் நடந்த அதிர்ச்சி

அண்ணி மீது அடங்காத ஆத்திரத்தில் கொழுந்தன்! வீடு புகுந்து! கதறியும் விடாமல்! இறுதியில் நடந்த அதிர்ச்சி

சிதம்பரம் அருகே, பாலியல் சீண்டல் புகார் அளித்த தனது அண்ணி தமிழரசியை, கொழுந்தனான பாலகிருஷ்ணன் அரிவாளால் தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்துள்ளார். முன் ஜாமீனில் வெளியே வந்த பாலகிருஷ்ணன், தகராறில் ஈடுபட்டபோது இந்த கொலையை செய்துள்ளார். 

1 Min read
Author : vinoth kumar
Published : Dec 01 2025, 10:54 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
தம்பதி இடையே கருத்து வேறுபாடு
Image Credit : Google

தம்பதி இடையே கருத்து வேறுபாடு

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே காட்டுக்கூடலூர் குளத்தங்கரை தெருவை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவரது மனைவி தமிழரசி (35). இந்த தம்பதிக்கு ஹரிகிருஷ்ணன் (13), ஹரிசக்தி (10) என்ற 2 மகன்கள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கணவனை மனைவி இருவரும் கடந்த 10 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

25
அண்ணிக்கு பாலியல் சீண்டல்
Image Credit : Asianet News

அண்ணிக்கு பாலியல் சீண்டல்

இந்நிலையில் கோபாலகிருஷ்ணன் சென்னைக்கு சென்று அங்கு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு சென்னையில் வசித்து வருவதாக கூறப்படுகிறது. தமிழரசி தனது இரண்டு குழந்தைகளுடன் தனியாக அதே கிராமத்தில் வேறு வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கணவர் கோபாலகிருஷ்ணனின் தம்பிகளான பாலகிருஷ்ணன், முருகானந்தம் இருவரும் தனதுக்கு பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாக சிதம்பரம் தாலுகா காவல் நிலையத்தில் தமிழரசி பரபரப்பு புகார் அளித்தார்.

Related Articles

Related image1
காலையிலேயே வந்த குட்நியூஸ்! சிலிண்டர் விலை அதிரடியாக குறைந்தது!
Related image2
29 வயது நிதினுக்காக 45 வயது சந்தியா செய்த வேலையை பார்த்தீங்களா! போலீசிடம் சிக்கியது எப்படி?
35
கொழுந்தன் கைது
Image Credit : our own

கொழுந்தன் கைது

இந்த புகாரை அடுத்து 3 பேர் மீதும் பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து முருகானந்தம் கைது செய்யப்பட்டார். ஆனால் பாலகிருஷ்ணன் மட்டும் போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவானார். தலைமறைவாக இருந்த பாலகிருஷ்ணன் முன் ஜாமீன் பெற்று ஒரு வாரத்துக்கு முன் வெளியில் வந்துள்ளார்.

45
தலை துண்டித்து அண்ணி கொலை
Image Credit : Google

தலை துண்டித்து அண்ணி கொலை

இந்நிலையில் பாலகிருஷ்ணன் நேற்று மாலை 3 மணியளவில் ஃபுல் மப்பில் வீட்டிற்கு சென்று தமிழரசியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது தகராறு முற்றவே ஆத்திரத்தில் பாலகிருஷ்ணன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் தமிழரசி கழுத்தை அறுத்துள்ளார். ஆத்திரம் தீராததால் தலையை தனியாக துண்டித்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பித்தார். இந்த சம்பவம் தொடர்பாக சிதம்பரம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தமிழரசி உடல் மற்றும் துண்டிக்கப்பட்ட தலை ஆகியவற்றை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

55
போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை
Image Credit : our own

போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள பாலகிருஷ்ணன் தேடி வருகின்றனர். பட்டப்பகலில் அண்ணியின் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கொலை
குற்றம்
தமிழ்நாடு குற்றச் செய்திகள்
காவல் நிலையம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
சகோதரியை கண்டித்த ஆசிரியர்..! பள்ளியில் துப்பாக்கிச் சூட்டில் 22 குழந்தைகள் பலி..! பணயக் கைதிகளான ஆசிரியர்கள்..!
Recommended image2
'இந்தியாவை எதிர்க்கும் எவருக்கும் இதுதான் நடக்கும்..!' சிறையில் கதறக் கதற கொல்லப்பட்ட பயங்கரவாதி.. கொலையாளிக்கு பெருகும் ஆதரவு..!
Recommended image3
பாகிஸ்தானில் இஸ்லாமியர்களுக்குள் மதத் தீண்டாமை..! ஷியா மசூதிகள் குறிவைக்கப்படுவது ஏன்?
Related Stories
Recommended image1
காலையிலேயே வந்த குட்நியூஸ்! சிலிண்டர் விலை அதிரடியாக குறைந்தது!
Recommended image2
29 வயது நிதினுக்காக 45 வயது சந்தியா செய்த வேலையை பார்த்தீங்களா! போலீசிடம் சிக்கியது எப்படி?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved