பணம் கூடவே வரணுமா.?! பில்லியனர்கள் பின்பற்றும் 5 கோல்டன் ரூல்ஸ்.!
மாறிவரும் தொழில்நுட்ப உலகில், பில்லியனர்கள் சவால்களை வாய்ப்பாக மாற்றும் திறன் கொண்டவர்கள். வாடிக்கையாளர் மனதை உணர்ந்து, ரிஸ்க் எடுக்கும் துணிவுடன், தலைவராகவும் கூட்டாளியாகவும் செயல்படுவதே அவர்களின் வெற்றிக்குக் காரணம்.

பணம் வளக்கலை தெரியுமா?
இன்றைய தொழில்நுட்ப உலகில் மாற்றம் என்பது நிலைத்திராத ஒன்றாக மாறிவிட்டது. சட்டங்கள், வாடிக்கையாளர் மனநிலைகள், மார்க்கெட் ட்ரெண்ட்கள் என அனைத்தும் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கின்றன. இந்த நிலைமை நிறுவனங்களுக்குள் புதிய முயற்சிகளை மேற்கொள்ள தடையாக இருப்பதை நாம் காண்கிறோம். ஆனால் பில்லியனர்கள், இந்த சவால்களை வாய்ப்பாக மாற்றிக் கொண்டவர்கள். அவர்கள் எதிர்காலத்தை முன்கூட்டியே புரிந்து கொண்டு, அதற்கேற்ப செயல்படக்கூடிய முடிவெடுக்கும் திறனுடன் செயலாற்றுகிறார்கள்.
பில்லியனர்களின் வெற்றிக்கான 5 முக்கிய சூட்சுமங்கள்
வாடிக்கையாளர் மனதை உணரும் திறமை
பெரும்பாலான வெற்றியாளர்கள் சந்தையின் தேவை மற்றும் வாடிக்கையாளரின் உணர்வுகளை நேரடியாக உணர்ந்த பின்னரே தொழில்தொடக்கத்தை செய்துள்ளனர். அவர்கள் ஒரு வாடிக்கையாளராகவே தங்களை வைத்துப் பார்த்து, உண்மையான கேட்பாடுகளை கண்டறிந்து தீர்வுகளை உருவாக்கினர்.
அவசரத்தின் மேல் கட்டுப்பாடு
தேவையான நேரத்தில் மெதுவாகவும், சரியான தருணத்தில் அதிவேகமாகவும் செயல்படுகிறார்கள். சிந்தனையுடனும், தாக்கத்துடனும் செயல் பட்டு விடுகிறார்கள்.
உற்பத்தி செய்வதோடு கண்டுபிடிக்கும் திறன்
சாதாரணமாக கண்டுபிடிப்புக்கும் உற்பத்திக்கும் தனித்தனி குழுக்கள் தேவைப்படும். ஆனால் இவர்கள் செயலில் இருக்கும்போதே புதிய யோசனைகளை தோற்றுவிக்கிறார்கள்.
ரிஸ்க் எடுக்கும் துணிவு
வெற்றியை விரும்பினால், தோல்விக்கான பயத்தையும் கடந்து செல்ல வேண்டியது அவசியம். பில்லியனர்கள், கையில் இருப்பதை இழப்பதற்கும் தயங்காமல், புதிய பாதைகளில் பயணிக்க துணிகிறார்கள்.
தலைவராகவும், கூட்டாளியாகவும் செயல்படும் மனநிலை
தொழிலை முன்னேற்ற, மற்றவர்களை வழிநடத்தும் திறன் மட்டுமல்ல, அவர்களோடு இணைந்து செயலாற்றும் பண்பு இவர்களிடம் இருக்கிறது. இது நம்பிக்கையை உருவாக்கி, வலுவான அணியை உருவாக்க உதவுகிறது.
பில்லியன் டாலர் கனவு சாதாரண வழியில் சாத்தியமா?
மில்லியன் டாலர்களை சம்பாதிக்க பல வழிகள் உள்ளன. ஆனால் பில்லியனாக வேண்டுமென்றால், அதற்கான மனப்பாங்கு, முடிவெடுக்கும் திறன், எதிர்காலக் கற்பனை இந்த மூன்றும் ஒன்றாகக் கலக்க வேண்டும். இந்த இரட்டைத்திறன்கள் அனைவரிடமும் இயல்பாக வருவதில்லை. சிலர் கடுமையான முயற்சியால் இதை வளர்த்துக் கொள்கிறார்கள். சிலர் இயல்பாகவே இந்தக் குணங்களை கொண்டிருக்கிறார்கள். யாராக இருந்தாலும், இந்த சூட்சுமங்களை புரிந்துகொண்டு, முயற்சியால் வளர்த்துக் கொள்ளும் நபர்கள்தான் எதிர்கால பில்லியனர்கள். பணத்தை மட்டும் அல்ல, பார்வையையும் வளர்த்தால்தான், பெரிய வெற்றிகள் உங்கள் பக்கம் நடக்கும்!
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.