MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • ரயில்வேயின் புதிய OTP திட்டம்.. ரயில் பயணிகள் இனி கட்டாயம் செய்தே ஆகணும்.!!

ரயில்வேயின் புதிய OTP திட்டம்.. ரயில் பயணிகள் இனி கட்டாயம் செய்தே ஆகணும்.!!

இந்திய ரயில்வே, டிசம்பர் 1 முதல் தட்கல் டிக்கெட் பதிவுக்கு OTP முறையை அறிமுகப்படுத்துகிறது. இது உண்மையான பயணிகளுக்கு வாய்ப்பளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

1 Min read
Author : Raghupati R
Published : Dec 01 2025, 01:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
இந்திய ரயில்வே புதிய அறிவிப்பு
Image Credit : stockPhoto

இந்திய ரயில்வே புதிய அறிவிப்பு

இந்திய ரயில்வே, தட்கல் டிக்கெட் பதிவு முறையில் முக்கிய மாற்றத்தை அறிவித்துள்ளது. டிசம்பர் 1 முதல், தட்கல் டிக்கெட் பதிவு செய்யும் போது பயனர் வழங்கிய மொபைல் எண்ணுக்கு OTP வரும். அதை உள்ளிட்ட பிறகே டிக்கெட் பதிவு செயல்முறை நிறைவடையும். தற்போது வெஸ்டர்ன் ரயில்வேயில் சில ரயில்களில் இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. பின்னர் அனைத்து ரயில்வே மண்டலங்களிலும் விரைவில் செயல்படுத்தப்படும்.

23
தட்கல் டிக்கெட் OTP விதி
Image Credit : Google

தட்கல் டிக்கெட் OTP விதி

ரயில்வே தகவல்படி, மும்பை சென்ட்ரல்–அகமதாபாத் ஷதாப்தி எக்ஸ்பிரஸில் டிசம்பர் 1 முதல் இந்த OTP அடிப்படையிலான தட்கல் டிக்கெட் முறை தொடங்குகிறது. உண்மையில் அவசரமாக பயணம் செய்ய விரும்பும் பயணிகளுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போகும் நிலையை தவிர்க்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Related image1
ரயில் ஸ்லீப்பர் கோச்களிலும் இனி பெட்ஷீட், தலையணை..! தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பு! பயணிகள் குஷி!
Related image2
ரயில் பயணிகள் கவனத்திற்கு..முழு ரீஃபண்ட் எப்போது கிடைக்கும்? புதிய ரூல்ஸ் இதோ
33
தட்கல் டிக்கெட்
Image Credit : Asianet News

தட்கல் டிக்கெட்

டிக்கெட் பதிவு செய்யும்போது மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும். அதை உள்ளிட்ட பிறகே டிக்கெட் உறுதிப்படுத்தப்படும். தவறான அல்லது போலி மொபைல் எண்கள் மூலம் பதிவு செய்வது இனி சாத்தியமில்லை. செயலில் உள்ள, சரிபார்க்கப்பட்ட மொபைல் எண்ணுடையவர்கள் மட்டுமே தட்கல் டிக்கெட்டை பதிவு செய்ய முடியும் என்றும் ரயில்வே தெரிவித்துள்ளது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
இந்திய இரயில்வே
தொடர்வண்டிப் போக்குவரத்து
ரயில்
தொடர்வண்டி பயணச்சீட்டு

Latest Videos
Recommended Stories
Recommended image1
Gold Rate Today (December 06): இதுதான் இன்றைய தங்கம் விலை.! விலை உயர என்ன காரணம் தெரியுமா?
Recommended image2
வீடு, கார், தனிநபர் கடன்களில் இஎம்ஐ குறையுது.. ரிசர்வ் வங்கியின் பரிசு.. எவ்வளவு குறையும்?
Recommended image3
கடன் வாங்கியவர்களுக்கு குட் நியூஸ்.. ரெப்போ விகிதம் 5.25% ஆக குறைப்பு.. அதிரடி முடிவு
Related Stories
Recommended image1
ரயில் ஸ்லீப்பர் கோச்களிலும் இனி பெட்ஷீட், தலையணை..! தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பு! பயணிகள் குஷி!
Recommended image2
ரயில் பயணிகள் கவனத்திற்கு..முழு ரீஃபண்ட் எப்போது கிடைக்கும்? புதிய ரூல்ஸ் இதோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved