MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • தங்க நகை அடமானம் வைக்க புதிய விதி! ரிசர்வ் வங்கி அறிவிப்பால் விவசாயிகள் கொந்தளிப்பு!

தங்க நகை அடமானம் வைக்க புதிய விதி! ரிசர்வ் வங்கி அறிவிப்பால் விவசாயிகள் கொந்தளிப்பு!

தங்க நகை அடமானம் வைக்க புதிய விதியை கொண்டு வந்துள்ள ரிசர்வ் வங்கிக்கு பாரதிய கிசான் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த விதியை திரும்ப பெற வேண்டும் என கூறியுள்ளது.

2 Min read
Author : Rayar r
Published : May 25 2025, 09:02 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
 Farmers Condemns RBI New Gold Loan Rules
Image Credit : Social Media

Farmers Condemns RBI New Gold Loan Rules

தங்க நகை அடமானம் வைப்பதில் இந்திய ரிசர்வ வங்கி பல புதிய விதிமுறைகளைக் கொண்டு வந்துள்ளது. அதாவது ந‌கையின் மதிப்பில் இனிமேல் 75% தான் கடன் வழங்கப்படும். நகையை அடகு வைப்பவர்கள் அந்த நகை வாங்கியதற்கான ரசீதை கொடுக்க வேண்டும் உள்ளிட்ட 9 புதிய விதிகளை கொண்டு வந்துள்ளது. 

ஏழை மற்றும் நடுத்தர மக்களே வங்கிகளில் அதிகம் நகையை அடமானம் வைப்பார்கள் என்பதால் ரிசர்வ் வங்கியின் புதிய உத்தரவு அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

24
தங்க நகைக்கடனுக்கான ரிசர்வ் வங்கி புதிய விதி
Image Credit : Social Media

தங்க நகைக்கடனுக்கான ரிசர்வ் வங்கி புதிய விதி

இந்நிலையில், தங்க நகைக்கடன் விதிகளை கடுமையாக்குவதன் மூலம், ரிசர்வ் வங்கி விவசாயிகளின் உயிர்நாடியை நெரிக்கிறது என்று பாரதிய கிசான் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக பேசிய பாரதிய கிசான் சங்கத்தின் தேசிய துணைத் தலைவர் டி. பெருமாள், ''நிதி நெருக்கடி காலங்களில் விவசாயிகளுக்கு முதலில் கைகொடுத்து உதவுவது தங்கம் தான். 

ஆனாலும் அந்த தங்கத்துக்கு ரசீதை கட்டாயமாக்கியுள்ளது நடைமுறைக்கு மாறானது. இது ஏழை விவசாய சமூகத்தை மோசமாக பாதிக்கும்'' என்று தெரிவித்தார்.

Related Articles

Related image1
ஏழை, நடுத்தர மக்களின் தலையில் இடியை இறக்கிய ரிசர்வ் வங்கி! இனி நகைக்கடன் பெற முடியாதா?
Related image2
ரிசர்வ் வங்கி அறிவிப்பு: மத்திய அரசுக்கு ரூ.2.69 லட்சம் கோடி டிவிடெண்ட்
34
ரிசர்வ் வங்கிக்கு விவசாயிகள் சங்கம் கண்டனம்
Image Credit : Google

ரிசர்வ் வங்கிக்கு விவசாயிகள் சங்கம் கண்டனம்

தொடர்ந்து பேசிய டி. பெருமாள், ''ரிசர்வ் வங்கியின் புதிய விதிகளுக்குப் பிறகு, விவசாய நடவடிக்கைகளுக்கு நிதி தேவைப்பட்டாலோ அல்லது மருத்துவ அவசரநிலைகள் ஏற்பட்டாலோ விவசாயிகள் எங்கு செல்வது என்று யோசித்துக்கொண்டிருக்கிறார்கள். 

ஏனெனில், வங்கிகளில் தங்கத்தை அடமானம் வைப்பதுதான் இன்றுவரை அவர்களின் முக்கிய முறையாகும். தனியார் கடன் வழங்குபவர்கள் சுறாக்கள். அவர்கள் அதிக வட்டியை வசூலிப்பார்கள்.  ஆகையால் வங்கிகள் மட்டுமே நம்பகமான தேர்வாக அமைகின்றன. ஆனால் இதிலும் ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது'' என்றார்.

44
விவசாயிகளை துன்புறுத்தும் செயல்
Image Credit : Social Media

விவசாயிகளை துன்புறுத்தும் செயல்

''பெரும்பாலான குடும்ப நகைகள் தலைமுறை தலைமுறையாக ஒப்படைக்கப்பட்டு, எந்த பதிவுகளையும் பராமரிக்க முடியாத நிலையில், நகைகளுக்கான உரிமைச் சான்றை விவசாயிகள் எவ்வாறு பெற முடியும்? வங்கிகள் தகுதிவாய்ந்த மதிப்பீட்டாளர்களைக் கொண்டுள்ளன.

 அவர்களின் பணி அனைத்து அளவுருக்களிலும் தங்கத்தின் உண்மைத்தன்மையை சரிபார்த்து ஒப்புதல் அளிப்பதாகும். எனவே, விவசாயிகளை நகைக்கான சான்றிதழைப் பெறச் சொல்வது அவர்களை துன்புறுத்தும் செயலாகும்'' என்று பெருமாள் கூறினார்.

ரிசர்வ் வங்கி மறுபரிசீலனை செயய் வேண்டும்

மேலும் பேசிய பெருமாள், ''ரிசர்வ் வங்கியின் புதிய செயல்முறை அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளும். ஏனெனில் அவர்கள் அதைப் பெற தங்கள் வீடுகளிலிருந்து வெகுதூரம் பயணிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். 

இந்த அளவுருக்களைக் கருத்தில் கொண்டு, புதிய ரிசர்வ் வங்கி வரைவை மறுபரிசீலனை செய்து, ஏற்கனவே உள்ள நடைமுறையைத் தொடர அனுமதிக்க வேண்டும்'' என்று தெரிவித்தார்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
இந்திய ரிசர்வ் வங்கி
தங்க நகை கடன்
விவசாயக் கடன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Agriculture: தேங்காய், பாக்கு விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! வேளாண் பொருட்கள் நேரடி ஏலம்.! எங்கு நடக்குது தெரியுமா?
Recommended image2
Gold Rate Today (December 06): இதுதான் இன்றைய தங்கம் விலை.! விலை உயர என்ன காரணம் தெரியுமா?
Recommended image3
வீடு, கார், தனிநபர் கடன்களில் இஎம்ஐ குறையுது.. ரிசர்வ் வங்கியின் பரிசு.. எவ்வளவு குறையும்?
Related Stories
Recommended image1
ஏழை, நடுத்தர மக்களின் தலையில் இடியை இறக்கிய ரிசர்வ் வங்கி! இனி நகைக்கடன் பெற முடியாதா?
Recommended image2
ரிசர்வ் வங்கி அறிவிப்பு: மத்திய அரசுக்கு ரூ.2.69 லட்சம் கோடி டிவிடெண்ட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved