MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Astrology: செப்டம்பர் 17 ஆம் தேதி முதல் இந்த 3 ராசிக்காரர்களின் தலை விதியே மாறப்போகுது.! அதிர்ஷ்டம் கொட்டப் போகுது.!

Astrology: செப்டம்பர் 17 ஆம் தேதி முதல் இந்த 3 ராசிக்காரர்களின் தலை விதியே மாறப்போகுது.! அதிர்ஷ்டம் கொட்டப் போகுது.!

செப்டம்பர் 17 ஆம் தேதி உருவாகவுள்ள ராஜயோகத்தால் சில ராசிகளின் வாழ்க்கை பிரகாசிக்க உள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ramprasath S
Published : Sep 08 2025, 04:39 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
புதாத்திய ராஜயோகம் 2025
Image Credit : Asianet News

புதாத்திய ராஜயோகம் 2025

ஜோதிடத்தின் படி நவகிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்கள் ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றுகின்றன. நவகிரகங்களில் இளவரசனாக கருதப்படும் புதன் பகவான், சந்திரனுக்கு அடுத்தபடியாக வேகமாக ராசியை மாற்றக் கூடியவர். இவர் புத்திசாலித்தனம், படிப்பு, வியாபாரம், பேச்சு ஆகியவற்றின் காரகராக விளங்குகிறார். தற்போது சிம்ம ராசியில் பயணித்து வரும் இவர் செப்டம்பர் 15்ஆம் தேதி தனது சொந்த ராசியான கன்னி ராசிக்குள் நுழைய இருக்கிறார். அவரைத் தொடர்ந்து கிரகங்களின் தலைவனான சூரியன் செப்டம்பர் 17 ஆம் தேதி கன்னி ராசிக்குள் நுழைய இருக்கிறார். இதனால் கன்னி ராசியில் புதன் மற்றும் சூரியன் இணைந்து புதாதித்ய ராஜயோகம் உருவாகிறது.

இந்த ராஜயோகம் மிகவும் சுபமானதாகவும், மங்களகரமானதாகவும், சிறப்பு வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது. இது புதனின் சொந்த ராசியான கன்னி ராசியில் உருவாக இருப்பதால் இந்த ராஜயோகம் அனைத்து ராசிகளின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை கொண்டு வரவுள்ளது. இருப்பினும் சில ராசிக்காரர்களுக்கு இந்த ராஜயோகம் அதிக பலன்களை கொடுக்க இருக்கிறது. அந்த ராசிக்காரர்கள் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

24
கன்னி
Image Credit : AI Generated

கன்னி

கன்னி ராசியின் முதல் வீட்டில் ராஜயோகம் உருவாக இருக்கிறது. இதன் காரணமாக இந்த ராசிக்காரர்கள் மிகுந்த பலன்களை பெற உள்ளனர். புதாத்திய ராஜயோகத்தால் தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். வருமானம் இரட்டிப்பாகும். பணியிடத்தில் வெற்றி கிடைக்கும். வார்த்தைகளை மூலதனமாகக் கொண்டு பணியாற்றுபவர்களுக்கு சிறந்த காலமாகும். கூட்டாக தொழில் செய்து வருபவர்களுக்கு நிதி நன்மைகள் கிடைக்கும். தொழிலில் இருந்த எதிரிகள், போட்டியாளர்கள் விலகி விடுவதால் தொழில் ரீதியாக மிகுந்த பலன்களை அடைவீர்கள். அரசியலில் இருப்பவர்களுக்கு நல்ல பதவி கிடைக்கும். தொழிலதிபர்களின் பிரச்சினை தீரும். கடன் பிரச்சினைகள் குறையும்.

Related Articles

Related image1
Astrology: 10 ஆண்டுகளுக்குப் பிறகு ராகு பகவான் நிகழ்த்தப் போகும் அதிசயம்.! 3 ராசிக்காரர்களின் வாழ்க்கை அடியோடு மாறப்போகுது.!
Related image2
Astrology: உருவாகப் போகும் மகா புருஷ ராஜயோகம்.! இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் கிடைக்கப் போகுது.!
34
தனுசு
Image Credit : AI Generated

தனுசு

தனுசு ராசியின் பத்தாவது வீட்டில் புதாத்திய ராஜயோகம் உருவாக உள்ளது. இதன் காரணமாக தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் ஏற்படும். மேலும் லட்சுமி நாராயண ராஜயோகத்தின் தாக்கமும் இணைவதால் இவர்களுக்கு அபரிமிதமான செல்வம் கிடைக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். பதவி உயர்வு, புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரலாம். தொழிலில் இதுவரை இருந்து வந்த பதற்றம் நீங்கும். சொந்தமாக தொழில் செய்து வருபவர்கள் தங்கள் வணிகத்தை விரிவாக்கும் வாய்ப்புகள் அதிகம். மாணவர்கள் படிப்பில் நல்ல முன்னேற்றத்தை காண்பார்கள். கணவன் மனைவிக்கு இடையே இருந்த பிரச்சனை தீர்ந்து குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.

44
மகரம்
Image Credit : AI Generated

மகரம்

மகர ராசியின் ஒன்பதாவது வீட்டில் புதன் மற்றும் சூரியன் இணைந்து புதாகித்திய ராஜ யோகத்தை உருவாக்குவதால், இவர்களுக்கு முழு அதிர்ஷ்டம் கிடைக்கும். குடும்பத்தில் அடுத்த அடுத்த சுப நிகழ்ச்சிகள் நடக்கும். அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். இதன் மூலமாக நிதி ஆதாரங்கள் மேம்படும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்களுக்கு சாதகமான முடிவுகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கி, சொத்துக்கள் கைக்கு வந்து சேரலாம். நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்து இருப்பவர்களுக்கு சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். தொழில் ரீதியாக இந்த காலம் சிறப்பாக இருக்கும். நிதி நிலைமையில் குறிப்பிடத் தகுந்த முன்னேற்றத்தை காண்பீர்கள்.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Today Rasi Palan : இன்று உங்களுக்கு லாபமா? நஷ்டமா? பிப்ரவரி 17-ம் தேதிக்கான 12 ராசி பலன்கள் இதோ!
Recommended image2
கும்பத்தில் செவ்வாய்-ராகு சங்கமம்: 40 நாட்கள் ஜொலிக்கப்போகும் 6 ராசிகள்! முன்னேற்றம் இனி உங்கள் கையில்!
Recommended image3
Birth Date : இந்த தேதிகளில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள்.! கஷ்டத்தையும் சாதனையாக மாற்றுவார்கள்.!
Related Stories
Recommended image1
Astrology: 10 ஆண்டுகளுக்குப் பிறகு ராகு பகவான் நிகழ்த்தப் போகும் அதிசயம்.! 3 ராசிக்காரர்களின் வாழ்க்கை அடியோடு மாறப்போகுது.!
Recommended image2
Astrology: உருவாகப் போகும் மகா புருஷ ராஜயோகம்.! இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் கிடைக்கப் போகுது.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved